முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் இருக்குறாரு கொமாரு!


"இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்' என ஒருத்தர்.

இவரை நம்பும் ஒரு கூட்டம்.

'ஆண்டவன் சொல்றான். அருணாசலம் செய்றான்' என இன்னொருவர்.

இவரை நம்பும் இன்னொரு கூட்டம்.

'கடவுள் இல்லை. கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி' என ஒரு கூட்டம்.

'ராமர் கோயில் கட்டியே தீருவோம்' என ஒரு கூட்டம்.

'பாபர் சமாதி எங்களுக்கே' என ஒரு கூட்டம்.

'குழம்பிய மக்களே! கர்த்தரிடம் வாருங்கள்!' என ஒரு கூட்டம்.

'அஹம் ப்ரம்மாஸ்மி. எனக்குள் கடவுள், உனக்குள் கடவுள். ஆனால் என் கடவுள் உன் கடவுளல்ல!' என ஒரு கூட்டம்.

இது போக கல்கி முதல் நித்தி வரை சித்தி வேண்டி கூட்டமோ கூட்டம்!

"இவங்க கைல சிக்கினோம்னா செத்தோம்டா!" ன்னு கடவுளர் அனைவரும் பதுங்கியிருக்கும் இடம், எனக்கு தெரியும் :-)

நீங்களும் அறிய விரும்பினால் மேலே படிங்க :-)

Before Sunrise என்று ஒரு திரைப்படம். 1990களில் வெளியாகி உலகின் நூற்றாண்டின் டாப் 100 படங்களில் முதலிடம் பிடித்த படம்.
செலின் என்ற ஃப்ரெஞ்ச்சு பொண்ணுக்கும் ஜெஸ்ஸி என்ற அமெரிக்க பையனுக்கும் இடையில் பல உரையாடல்கள். அதில் ஒன்றில்தான் கடவுள் ஒளிந்திருக்கிறார்!
"
Celine: I believe if there's any kind of God it wouldn't be in any of us, not you or me but just this little space in between. If there's any kind of magic in this world it must be in the attempt of understanding someone sharing something. I know, it's almost impossible to succeed but who cares really? The answer must be in the attempt.
"
அதாவது,
"
கடவுள் என்ற ஒருவர் இருந்தால் அவர் என்னிலோ உன்னிலோ இருக்கமாட்டார்; நமக்கிடையேயான இந்த சிறிய இடைவெளியில்தான் இருப்பார்.

இந்த உலகில் மேஜிக் என்னும் மந்திரவித்தை என்னவென்றால், நம்மோடு தம் தினத்தை பகிரும் உயிர்களின் பகிர்தல் பற்றி உணர/புரிந்துகொள்ள நாம் செய்யும் முயற்சிகளே.

முயற்சியால் பலன் கிடைப்பது கடினமாக இருக்கலாம்; என்ன போச்சி அதனால்? விடை நம் முயற்சிக்குள் ஒளிந்திருக்கிறது.
"
கடவுளை காணும், உணரும் மேஜிகல் மொமெண்ட்ஸ், நம்மைச்சுற்றி உள்ள உயிர்களுக்கும் நமக்குமான இடைவெளியில் பொதிந்துள்ளன. முயன்றால் இறை தரிசனம் கிட்டும்...

கடவுள் இருக்குறாரு கொமாரு!




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்