முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணம்மா கேன்டீன்



நண்பர் ஒருவர் நகரிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பேராசிரியை.

மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்காக என்னை அழைத்திருந்தார்.

என்னை கல்லூரிக்குள் வரவேற்று பிரின்சிபாலிடம் அறிமுகம் செய்து விட்டு, 'உரையாடல் ஆரம்பிக்கிறதுக்குள்ள ஒரு சுக்கு காபி சாப்டலாம் வாங்க. கண்ணம்மா கேன்டீனுக்கு போலாம்' என்றார்.

பெயர் ஈர்க்கவே, சென்றேன்.

சிறு தானிய முறுக்கு, லட்டு, மர விளையாட்டு பொம்மைகள், 'Never eat anything that your Grandma wouldn't have approved!' என்ற banner... இது அத்தனையும் ஒரு பெரிய பொறியியல் கல்லூரி நிறுவன வளாகத்துள்!

கடை நடத்தும் இளைஞரோடு அறிமுகம் ஆயிற்று. 

சந்துரு.

'ஏன் கண்ணம்மா?' என்றேன்.

"பாரதியார் பிடிக்கும். படிச்சதில இது நெஞ்சில பதிஞ்சிடுச்சி"

தாராபுரம் அருகில் உள்ள ஒரு ஊரிலிருந்து இதே பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் என்ஜினியர் ஆன பின்னர், ஆன பின்னர், இந்த உணவகத்தை இங்கேயே நடத்துகிறார்!!!!

கல்லூரி அருகிலேயே தங்கியிருக்கிறார். 'பத்துக்கு பத்து இடத்த தாண்டி என்ன வேண்டியிருக்கு?" என்கிறார். விவசாயத்தில் ஆழ்ந்த ஆர்வம், ஈடுபாடு, தேடல்...

அவரது வேலைகளுக்கிடையே சுக்கு காபி பருகியபடியே பேசினேன்...

'என்ன ப்ளான்? இப்டியே எத்தன நாள்?' என்றேன்.

"வாழ்க்கைக்கு வேண்டியது கிடைக்கிது. தெரியல சார். இதோ நாலு நாள் லீவு வருது. விவசாயிகள, நிலங்கள பாக்க கிளம்பிடுவேன். அப்றம்...ஒன்னர மாதம் கழிச்சி பெரிய ப்ரேக் வரும். அப்பயும் சுத்துவேன்... எட்டு மாசந்தான் சார். அதுக்கப்றம் விவசாயம்தான்!" என்றார் உறுதியாக.

'விவசாயம் செய்திருக்கீங்களா?' என்றேன்.

"பண்ணேன் சார். நிறைய மரம் வச்சேன். தண்ணியில்ல..."

இரு நண்பர்கள் இணைந்து ஆரம்பித்த உணவகமாம். நண்பர் சில மாதங்கள் முன்பு மேற்படிப்பு படிக்க சென்றுவிட்டாராம். தனியே போராடுகிறார்...

என் நண்பர் 'உன் friend கிளம்பிட்டது எனக்கே கஷ்டமா இருந்தது' என ஆதங்கப்பட்டபோது "இல்லங்க மேடம், படிக்கதானே போனான், நல்ல விஷயம்தானே' என்றார் சிரிப்பு மாறாமல்!

'கண்ணம்மா சிந்தனை' என்று ஒரு வெள்ளை போர்டில் தன் கருத்துகளை அவ்வப்போது மார்க்கர் பேனாவால் எழுதி வைத்து விட்டு, உணவு அருந்த வருபவர்களுக்கு நல்ல உணவு, மலிவாக, தரமாக என்ன கொடுக்கலாம் என சிந்தித்திக்கொண்டிருக்கிறார்.


விடைபெறும் முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்தேன். சிரிப்பு மாறாமல் மாணவர் கூட்டத்திற்கிடையில் அவர் நிற்க, திகைப்பாய் என்னைப்பார்த்த மாணவர்களிடம் மென்மையாய், 'இவர்தான் இங்கே உண்மையான HERO, guys...' எனச்சொல்லி நகர்ந்தேன்.

விடைபெறும்போது வேண்டுகோள் ஒன்று வைத்தார், 'இந்த water management பத்தி எதுனா செய்ங்க சார்...'

செய்வேன்!

கனவு மெய்ப்படவேண்டும்... வாழ்த்துக்கள் சந்துரு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்