முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோத்தாங்குளி தோல் புடுங்கி!


சின்ன வயதில் கில்லி, பம்பரம் ஆடுகையில் தோற்றுப்போனால் உலகிலேயே அதுதான் பெரிய அவமானம் என்று தோற்றவனை நினைக்கவைக்கும் அளவுக்கு மற்ற சிறுவர்களெல்லாம் சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி "தோத்தாங்குலி தோல் புடுங்கி! மாட்டுக்கு மசிர் புடுங்கி" என கெக்களிக்கும்போது... அழுக அழுகயா வரும், ஆனா அடுத்த ஆட்டத்தில 'மவன, ஒனக்கு இருக்குடா!'ன்னு சமாதானமாயிரும். இதுக்கெல்லாம் அசராததாலதான் முந்தைய தலைமுறைக்கு தோல்வி ஒரு சப்ப மேட்டரானது :-)

'இப்போ இன்னா அதுக்கு?' என்கிறீர்களா?!

தமிழ் மொழியில் வட்டார வழக்கில் பழமொழிகள், சொலவடைகள் போல, பழகுதமிழ் பாடல் என்ற ஒன்றும் இருந்தது. 

நேரத்தை வெட்டியாய், விளையாட்டாய் கடத்தினாலும் பலனளிக்கும் தமிழ் விளையாட்டுக்கள். இலக்கண கட்டமைப்போ தாளகதியோ தேவையில்லை இவற்றுக்கு.

உதாரணம்: மதுரை சிவகாசி வட்டார வழக்கில் பொழுது போகாத சிறார்கள் கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் எனப்படும் உரையாடலை துவக்க கண்டுபிடித்த பாடல் ஒன்று இதோ:

சிறுமி 1: ஏதாவது சொல்லு புள்ள!

சிறுமி 2: சொல்லு சொல்லுன்னா என்னா சொல்றது?!

சி1: ஏதாவது சொல்லு!

சி2: (சின்ன சிரிப்போடு) சொல்லு சொல்லுன்னா பல்லியா!

சி1: பல்லி பதுங்காதா?

சி2: பதுங்க வெள்ளாடா?

சி1: வெள்ளாடு மேயாதா?

சி2: மேய ...

கற்பனை வளம் உள்ள வரை நீண்ட இந்த வார்த்தை விளையாட்டு, தமிழ் வளர்த்தது, பழகுதமிழை வளர்த்தது, நட்பை வளர்த்தது, சிறுமிகளின் சிரிப்புச்சிதறல்கள் கேட்பவர் மனதில் மகிழ்ச்சியை வளர்த்தது!

Such, is the power of our language!

கற்பனை செய்து பாருங்கள், கற்பது இவ்வளவு இனிமையாக இருக்க முடியுமா?!

முடிந்தது அன்று... 'முடிந்தது' இன்று!

சரி, மேட்டருக்கு வருவோம் :-)

இந்தப்பாடலை என் நினைவிலிருந்து எழுதியுள்ளேன். தொடர்ச்சி மறந்துபோனதால் கூகுளைக்கேட்டேன். கூகுள் தந்த விடைகளை (பட இணைப்புகள்) பார்த்தபின், நெடுங்காலம் கழித்து 'தோத்தாங்குளி' பாடலை கூகுளை நோக்கி பாடினேன் மீண்டும் சிறுவனாகி! If you close your eyes now, you may 'see' me singing this, dancing around my internet device :-)





பை த வே, இந்த (தோத்தாங்குளி) கூத்துப்பாடலில் கூட ஒரு ஒழுங்கு இருப்பதை கவனித்தீர்களா?
தோனாவுக்கு தோனா, அடுத்த வரியில் மானாவுக்கு மனா!

ஹலோ, பதிவ படிச்சீங்கல்ல, மிச்ச பாட்ட சொல்லுங்க பாஸ், கமெண்ட்டுல!

சரியாக முழுமையாக பதிபவர்க்கு பரிசு, 'ஒருப்பட்டம் திருப்பட்டம் ஓரியமங்கலம்...' என்ற இன்னொரு 'பழகு தமிழ்' பாடல்!

பின் குறிப்பு: இது இந்து விரோதப்பாடல் அல்ல :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்