முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வக்கீலு!


ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன்.

கால்ல குத்துன முள்ளக்கூட பிடுங்கத்தெரியாதவன். குரு அதுக்கு மேல.

தரைல தேச்சிட்டு போவியா ன்னு சொல்லாம அவரோட பாண்டித்யத்தை காமிக்கிறாராம்.

ஹலோ, அந்த வீணாப்போன சீடனும் நாமதான், அந்த பாண்டித்ய குருவும் நாமதான்!

முள்ளுத்தடத்தில செருப்பு போட்டிருந்தா முள்ளே குத்திருக்காது.

சரி, செருப்பு இல்ல, குத்திருச்சி ன்னா, முள்ளப்புடுங்க முயற்சிக்காம ஆலோசனை கேட்டு திரிஞ்சா?

நம்ம வீட்டுலேந்து ரோடு வரைக்கும் (அதைத்தாண்டி ஒரு அடி கூட வேணாம்!) எடுத்துக்குவம்.

எந்த ஒரு சிக்கல் வந்தாலும் 'யார' திட்டலாம்னுதான் திரியிறமே தவிர நாம என்ன பண்ணலாம்னு... ஊஹூம், யோசிக்கவே மாட்டமுல்ல!

ரோடு போடுறது, பைப் போடுறது நம்ம வேலை இல்லை. 

போட வைக்கிறது?

கோடை வெயில் - நம்ம வேலை இல்லை. 

மரம் வக்கிறது?

போர் போடுறது, நம்ம வேலை. மட்டம் எறங்கிகிட்டே போச்சின்னா... வாட்டர் டாங்க்கர வரவப்போம், ஆனா மரம் நட மாட்டம்!

யோகாசனம், வாய்ப்பாட்டு, வெஸ்டர்ன் டான்ஸ், ஸ்போர்ட்ஸ் னு பசங்கள மூச்சு வுட முடியாத பெடலெடுப்போம்; இயற்கை வளங்கள, அதாங்க, தண்ணி பைப்பு, கரண்டு சுச்சு, குப்பை மறு சிழற்சி ன்னு எதையும் சொல்லிக்குடுக்க மாட்டோம்.  நாம செஞ்சும் காமிக்கமாட்டோம்!!

சூரியன் சும்மா அள்ளித்தரான் வெய்யில. அதுகூட ஏராளமான உடல்நலத்தையுந்தான். 

மூச்! கொளந்தங்க வெய்யில்ல நின்னா... அய்யோ! கருத்துருவாய்ங்க, வூட்டுக்குள்ள அடை! வைட்டமின் D3 உப்பு விக்கிதாம்ல, வாங்கி குடுத்துடுவம், அது போதும், சூரியன் வோணாம்.

நூறாண்டு வாழ ஆசைப்படுவம், கண்டதை வாங்கி திம்பம். அவசியமுன்னு வாங்குற காய்கறி, பால் பழம் எல்லாம் நஞ்சில ஊறி வந்தாலும் திம்போம்; இன்சூரன்சு இருக்கே மக்கா ம்போம்.

ஆனா, நம்ம நாட்டில என்ன பிரச்ன ன்னு லைட்டா உசுப்பேத்துனா போதும், குலுங்கின கோக் பாட்டில் மாதிரி பொங்கிப்பொங்கி வழிவோம்!

அரசியல் என்பது ஒரு தொழில். அதை முனைவோர் லாபத்திற்காகத்தான், அவர் லாபத்திற்காகத்தான், உழைப்பர்.

உங்களுக்கு அவர்களது சேவை பயனளித்தால் தொடர்ந்து வாங்கலாம், இல்லையேல் வேறு முனைவோர்களை நாடலாம், அல்லது அந்த சேவையே அவசியம்தானா எனக்கேட்டு தெளியலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை, சிறு பருக்கை, இதோ:

உங்கள் ஊர் கடற்கரையிலிருந்து வெகு தூரம். நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. போர் போட்டு, ஆழப்படுத்தி, மீண்டும் போர் போட்டு, கடன்பட்டு... இதுதான் இன்றைய இயல்பு வாழ்க்கை.

மாற்று வாழ்க்கை:

உங்கள் வார்டு கவுன்சிலரை அணுகி நிலத்தடி நீர் அளவு வேறுபாடுகளை பதிவதற்கு என்ன வழி என்று பார்த்தல்.

ரிசர்வ் சைட்கள், பொது தடங்கள் அனைத்திலும் அரசு செலவில் நாட்டு மரங்கள் நடுதல், வளர்த்தல்.

உங்கள் வீட்டுக்கு முன்னோ பின்னோ மரங்கள் வளர்த்தல்.

மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை தனி, பொது இடங்களில் அமைத்து காத்தல்.

இவற்றில் ஒன்றையாவது செய்தால்கூட தண்ணீர் பிரச்னைக்கு நீடித்த தீர்வு கிட்டும்.செலவும் அதிகமில்லை.

நாம் ஏன் முயல்வதில்லை?

ஒரு வக்கீலும் பொண்டாட்டியும் ரோட்டில வாக்கிங் போனாங்களாம். அப்போ ரவுடி ஒருத்தன் குறுக்காட்டி கலாட்டா பண்ணி அவருடைய பொண்டாட்டி கைய புடிச்சி இழுத்தானாம்.

ஆவேசமாகி கோவத்தில பொங்கின வக்கீலு, 'டேய்!... நாளக்கி கோர்ட்டுக்கு வாடா பாத்துக்கிறேன்!!!!!' னு சிவாஜி கணக்கா மொழங்கினாராம்!

வக்கீலா இருக்கிறதும், வக்கீலு பொண்டாட்டியா இருக்குறதும் அவரவர் பாடு!

பத்துரதன் புத்திரனின்...



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்