முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குவாட்டர்

ப்ராமின்.

குடித்திருந்தார்.

என்னெதிரில் தள்ளாடி நிமிர்ந்து, என் நண்பரிடம் 'எஸ்க்யூஸ் மி, ஒரு மூனு ரூபா சேஞ்ச் இருக்குமா, பஸ்சுக்கு அஞ்சு வேணும்', விரிந்த அவரது உள்ளங்கையில் 2 ரூபாய் காசு.

என் நண்பர் சுவாரஸ்யமாகி பர்சை எடுத்து கிடைத்த சில்லறையை (7 ரூபாய்) அவர் கையில் தர,

'டோன்ட் மிஸ்டேக் மி. எனக்கு மூனு ரூபாதான் வேணும். உங்க பேரென்ன?'
'முருகன்' என்றார் நண்பர்.

அவரது கரத்தை கெட்டியாய் பற்றி 'முருகன்! சாட்சாத் பழனி முருகனேதான் உங்களை அனுப்பியிருக்கார். மூவேழு இருபத்தொரு ரூபா கொடுங்கோ' என்றார்.

திகைத்த முருகன் சுதாரித்துக்கொண்டு 'எதுக்காக ஸ்பெசிபிக்கா 21 ரூபான்னு தெரிஞ்சிக்க விரும்பறேன்' என்றார் தன் கையை மெல்ல விடுவித்து.

'ஐ கான்ட் ரிவீல் தேட். ஓகே, பை' என அந்த நபர் நகர்ந்து சென்றார்.

'பிராமின்ஸ் எல்லாம்கூட இப்படி...' என்றார் முருகன்.

'பாவம்' என்றார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்.

'இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எதுக்கு பாவம்ங்கிறீங்க?' என்றார் இன்னொரு பெண்.

'அவருக்கு என்ன கஷ்டமோ...' என்றார் மூன்றாவது பெண்.

'பொண்டாட்டி தொல்லை தாங்காமயோ என்னமோ' என ஹாஸ்யத்தை முருகன் முயற்சிக்க, யாரும் ரசிக்காமலே கலைந்து சென்றனர்.

எனக்கு ஆர்வம் குறையவில்லை, 'அது என்ன 21 ரூபாய் கணக்கு?'

அந்த நபர் என் பார்வை தொடும் தூரத்திலேயே நெடுஞ்சாலை ஓரம் நின்றிருப்பது கண்ணில் பட, கவனிக்க ஆரம்பித்தேன்.
'எஸ்க்யூஸ் மி' பஸ்சுக்கு மூனு ரூபாய் இருக்குமா' என யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தார்!

ஒரு க்வாட்டர் என்ன விலைங்க? தெரிஞ்சவங்க யாராவது தீத்து வைங்களேன்!

(இன்று இரவோ நாளை காலையோ மதுவில் விலாசம் கரைத்து 'சார், எல்ப் மி. வீட்டுல உடமுடியுமா? வீடு... எங்கன்னு தெரியலங்க' என இவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம்!).

பின் குறிப்பு:

அந்தணர் அநேகர் இருக்கும் ஒரு முகநூல் குழுவில் இதை பதிவேற்றியதிலிருந்து பின்னூட்டங்கள் வெகு சூடாக; வேற வர்ணத்து ஆளு குடிச்சா அவன் ஜாதிய எளுத தகிரியம் இருக்கா? நாங்க என்ன கிள்ளுக்கீரையா? என வெளுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேட்டுக்குடி என்றால் மனதில் மரியதை வருவது போல் அந்தணர் வர்ணாசமரத்தில் உயர்நிலையில் இருப்பவர், மதுவினால் இப்படி என ஆதங்கத்தில் குறிப்பிட்டேனென பதிந்தும் பலனில்லை. இந்த அடிப்படை சினம் வர்ணத்தால் மாறாது போல... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்