முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடு சுதந்திரம் அடைய வாழ்த்துக்கள்!


இந்தக்கிழவன் சாதாரண ஆளில்லை!

சுதந்திர நாடு என்றால் என்னங்க?

விடுதலை அடைந்த நாள் சுதந்திர நாள் என்றால், விடுதலை அடைந்தவரெல்லாம் சுதந்திரமாக வாழும் நாடாச்சா அந்த நாள் முதல்?

இல்லையே!

தனி மனித சுதந்திரம் - அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்ட நீதித்துறை இதன் எல்லைகளை வகுக்கிறது. என் விரலை உன் மூக்கின் நுனி வரை நீட்ட எனக்கு சுதந்திரம் இருக்கிறது, தொடுவதற்கு உன் அனுமதி வேண்டியிருக்கிறது.

அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உன் சுதந்திரம்; தனி மனித சுதந்திரம்.

நாட்டின் சுதந்திரம்? சுதந்திர நாடு?

இதைப்பற்றி நமக்கு பலவித கருத்துகள் உண்டு; புவியியல், மொழி, இன, மத, அரசியல் சார்ந்த கருத்துக்கள், அவற்றில் தோய்ந்த கருத்துக்கள்.

சுதந்திரம் வாங்க சரியான நேரத்தில் சரியான இடத்தில் வினையூக்கியாக உப்பிட்ட ஒரு கிழவன், சுதந்திரத்தை இப்படி வரையறுக்கிறான்:

'என்று ஒரு பெண் நள்ளிரவில் அணிகலன்களுடன் பயமின்றி நம் சாலைகளில் தனியே நடமாடமுடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் ஆனோம்'!

இவன் சாதாரண ஆளில்லை, இவனது வரையறையும் நுனிப்புல் வகையில்லை;

ஏன் பெண்?
ஏன் நள்ளிரவு?
ஏன் நகைகளுடன்?
ஏன் தனியே?

ஏன் இந்த கேள்விகளை யாருமே (சட்டங்கள் தீட்டுவோரும் அதன்படி நடக்கவேண்டியவரும்) தெளிவுபட அலசி தீர்வுகளடங்கிய சட்டங்கள் இயற்ற இயலவில்லை? அமல்படுத்த இயலவில்லை? அதன்படி நடக்க இயலவில்லை?

இந்த கேள்விகளை ஆழ்ந்து சிந்திப்பவர்க்கு நீண்டதொரு சிக்கலின் நுனி பிடிபடலாம்...

ஆதி மனிதன், மரத்திலிருந்து தரையிறங்கி, குகை மனிதனாகி, பால்பேதமின்றி உணவு வேட்டை செய்து,  நடைமுறை சிக்கல்களின் தீர்வாக (மாதவிலக்கின்போது விலங்குகள் குருதி மணம் கண்டு, ஆண்களைவிட வலிமை குறைந்த இவர்களை எளிதில் வேட்டையாடி...) ஆண்கள் வேட்டைக்கு, பெண்கள் வீட்டுக்கு என காலப்போக்கி்ல் வரையறை செய்தபின் இன்றுவரை இந்த 'சட்டம்'தான் செல்லுபடியாகிறது உலகம் முழுதும்.

பண்டமாற்றின் பண்டைய கரன்சியாய் புழக்கத்துக்கு வந்த தங்கம்,
வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சூடி அழகுபார்க்க, இக்கட்டான நேரங்களில் பண்டம் மாற்ற என இவர்களின் உடலில் ஏறிக்கொண்டதும் காலப்போக்கில் நடந்ததே. 

பெட்டியில் பூட்டிய தங்கத்தை கள்வர் உடைத்தால் பெட்டி அலறாது, பெண்கள் அலறுவர், கள்வர் பிடிபடுவர். எனவே பெட்டியை விட பெண்ணே தங்கத்துக்கு காப்பு. பெண்கள் எப்போதும் வீட்டில்தானே என்பது கூடுதல் பாதுகாப்பு.

மனிதர்களின் எல்லைகள் விரிய விரிய விலங்குகளின் எல்லைகள் குறைந்தாலும், மனித மிருகங்களின் எண்ணிக்கையும் எல்லைகளும் விரிந்துகொண்டே செல்கின்றன. இவர்களின் தேவைகளும்தான்.

பேராசை பெருநுகர்வுத்தேவைகளே பெண்களை மீண்டும் பொதுவெளியில் தள்ளுகிறது, காது கழுத்து தங்கத்தை அறுத்துப்போக வைக்கிறது. வலிவற்ற சட்டங்கள், இப்பெண்களின் கற்பு அறுபட்டாலும் கடுமையாய் தண்டிக்காது என நடைமுறையில் உணர்ந்த, 'வளர்ச்சி' போதையிலும் (சாராயம் முதல் உள்ளங்கை உலக டெக்னாலஜி வரை போதைதானே), சகலத்தையும் சதையை முன்னிறுத்தி விற்கும் பேராசை பெருவணிகம் தரும் 'ஜிவ்' உணர்விலும் (addictive high) உந்தப்படும் மனித மிருகங்கள் பாதுகாப்பற்ற பெண்களின் கற்பை தொடர்ந்து வேட்டையாடவைக்கிறது.  நம்மை விட்டு அகலாத குகை மனித மனப்பாங்கு ஏனையோரை வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கிறது.

இந்த நீள் சிக்கலின் நுனி கண்ட கிழவன், அதை அவிழ்ப்பதற்கு காட்டிய வழி எளிது:

பெண்களின் மீதும் தங்கத்தின் மீதும் கொண்ட மோகத்தை கொன்றுவிடு. 
இல்லையென்றால் சட்டம் கொன்றுவிடும் என 'கொன்று' உணர்த்து. இவையிரண்டையும் நடைமுறைப்படுத்தமுடிந்தால்மட்டுமே உன் நாடு சுதந்திர நாடு!


உன் விரலின் சுதந்திரம் என் மூக்கின் நுனிவரை மட்டுமே, தொடாமல் மட்டுமே என 70 வருடங்களாய் ஜல்லியடிக்கிறோம். மூக்கு வேறு, குறி வேறு என்று வீண் வாதம் பேசாமல் கிழவனது கனவு நனவாக சிந்திப்போம், செயல்படுவோம். அதுவரையில், 'என் உடை என் விருப்பம், எங்கு எந்நேரத்தில் என்ன செய்யக்கூடாதென்று என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது' என முன்சொன்ன டெக்னாலஜி மோகத்தால் உந்தப்பட்டு வீண்வாதம் செய்து உள்ளாடை தெரிய சுற்றும் நம் தங்கைகளுக்கு மென்மையாய் புரியவைப்போம் 'தெருவில் வெறிநாய்கள் இருப்பது தெரியவந்தால் கவனமாய் கடப்பது பொது அறிவு' என.

சுதந்திரம் விரைவில் கிட்ட வாழ்த்துக்கள்!


பின் குறிப்பு:

கிழவன் சொன்னது 'இயல்பாய் ரசிக்கும் வண்ணம், பார்ப்பவர் மனதில் மரியாதையை உண்டாக்கும் வண்ணம்' உடையணிந்து நடக்கும் பெண்களுக்கு மட்டுமே!

பொதுவெளியில் இன்றைய இந்தியாவிலும் பெண்கள் அளவு 'உடலை வெளிப்படுத்தி' உடையணியும் ஆண்கள்? நான் கண்டதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்