முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகை கக்கும் க்ரெடிட் கார்டு!


புகை கக்கும் க்ரெடிட் கார்டு!

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் கழுத்தைத்திருகி, 'மாசு படுத்தாதே! பூமிக்கு உங்கள் ஆலைகளில் பசியினால், கழிவினால் மூச்சு முட்டுகிறது!' என அன்பாய் வேண்ட, இந்த நாடுகள் ஈனஸ்வரத்தில் 'நீங்க வளர்ந்ததும் இப்படித்தானே' என பயந்து கேட்க, 'போனால் போகிறது; எந்த அளவு மாசு சேர்க்கிறீர்களோ அந்த அளவு காடு வளருங்கள். காடுகள் உங்கள் மாசை (கார்பன்) உண்ணும், புவி மகிழும் என சாசனம் எழுதினர்.

சங்கி மங்கி போல அழுவதற்கு கூட ஆள் வைத்திருக்கும் கூட்டமான நாம் (அதாவது, வளரும் நாடுகள்), 'நான் இங்கன எரிக்கறேன். நீ அங்கன ஏற்கனவே காடு வளத்திருக்க இல்லயா, அது சாப்பிடுற கார்பன நான் வெளியேத்தற கார்பன்லந்து கழிச்சிக்கலாம். அதுக்கு காசு தாறேன்' என அதையும் வணிகமாக்க, பிறந்தது, வளர்ந்தது கார்பன் க்ரெடிட் பெருவணிகம்.

சரி, மேட்டருக்கு வருவோம்.

"கலிபோர்னியாவில் 95 ஆயிரம் எக்டேர் காடுகள் காட்டுத்தீயில் பொசுங்கின'

'டாக்காவில் வெள்ளம், ஏராளமான சேதம்'

'இங்கிலாந்தில் வெள்ளம், ஏராளமான சேதம்'

'கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு, ஏராளமான சேதம்'

'பீகாரில் வெள்ளம், கோஷி ஆறு வேறு புதிய பாதையில் ஓடத்தொடங்கியது. ஏராளமான சேதம்'

'போர்ச்சுகலில் நெடுஞ்சாலை ஒன்றின் இருபுறமும் காட்டுத்தீ. சாலை வெந்தது. ஏராளமான சேதம்'

'நியூயார்க் நகரில் வரலாறு காணா பனிப்பொழிவு, கடும் சேதம்'

'கேப் டவுனில் குடிக்க தண்ணியில்லை் டூரிஸ்ட்டுகள் வரவேண்டாம். மீறி வந்தா தண்ணியோட வாங்க!'

'என்ன நடக்குது இங்க? இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா?' ன்னு எல்லா நாடும் குமுறி இயற்கைய பன்னாட்டு அமைதி கோர்ட்டுக்கு இழுத்தாங்களா, வாய்தா வாங்காம ஒடனே ஆஜரான இயற்கை சொன்னதாம், 'கூட்டி கழிச்சி பாருங்க மக்களே, கணக்கு சரியா வரும். நீங்க கார்பன் எக்ஸ்சேஞ்ச் நடத்துறீங்கோ. ஒங்களுக்கு இதெல்லாம் சுலபமா புரியுமுன்னு நெனச்சேன். நீங்க எல்லாம் "தொலச்சத தொலச்ச எடத்தில மீட்காம" க்ரெடிட்ல ஓட்றீங்கோ. நான் "பாலன்ஸ் ஷீட்" மெய்ண்ட்டெய்ன் பண்றேனோல்லியோ,ஒங்க பாணில நானும் ஒரு எடத்தில எரிச்சி இன்னொரு எடத்தில பனி பெய்ஞ்சி...  இப்படித்தான் இருக்கும், நடக்கும்... கூட்டி கழிச்சி பாருங்க. பாத்துட்டு  சட்டுபுட்டுன்னு பஞ்சாயத்த கலச்சிட்டு போய் இந்தோனேசியால பூகம்ப உதவி எதுனாச்சும் பண்ணுங்க' ன்னு சொல்லிட்டு போச்சாம்.

அசருவாங்களா நம்ம ஆளுங்க, 'பூகம்ப நிதிக்கு கார்பன் க்ரெடிட் கார்ட உரசலாமா?' அப்டீங்கற தலைப்புல அடுத்த பஞ்சாயத்த ஆரம்பிச்சிட்டானுவோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்