முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவ சிறகும் சாத்தான் கொம்பும்!


மனிதர்க்கு மட்டுமல்லவே பூமி!
Earth is not for humans alone!

'நமக்கு இல்லேன்னா பின்ன யாருக்கு?' என கோபமாய் மடக்கிய முஷ்டியை சற்றே தளர்த்தி மேற்கொண்டு வாசிப்போம் வாருங்கள்!

"மனிதர்க்கே அல்ல பூமி!" என்பது கோண்ட்வானா என்ற அழிந்த நம் பூர்வ கண்டத்தின் (இன்றைய தென்பாதி பூமியில் உள்ள நாடுகள் அனைத்தையும் தன்னுள் கொண்ட பெருங்கண்டம்!) மரபுத்தொடர்ச்சியாக இன்றும் நம் நாட்டின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பூர்வ குடியினரான, நம் மூத்த குடியினரான "கோண்டு" இன மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

பழங்குடியினர் சித்திரங்கள் மூலம் தகவல் பரப்புபவர்கள், பெரும்பாலும் அவர்களை வியப்பில் ஆழ்த்திய அல்லது திகைப்பில் ஆழ்த்தியவற்றை பாறைச்சுவர்களில் வண்ணச்சாந்து கொண்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் காலத்தோடு கரையாது இன்றும் கதை சொல்கின்றன.

அவர்கள் வழி வந்தவர்கள் நவீன வண்ணங்களை பயன்படுத்தி தம் கலையை சுமார் இருபது வருடங்களுக்கு முன் காகித்தில் கசியவிட, உலகமே வியந்து கவனிக்கத்தொடங்கியது.

இன்று இந்தக்கலை உலகெங்கும் பரவியாச்சு; உன்னதமான கட்டிடங்களின் உட்சுவர்களில் இவர்களின் கோண்டு ஓவியங்கள் வண்ணங்கள் வழிய உலவவிட்டிருப்பது நம் பழமைக்கானகங்களை,  மரங்களை, விலங்குகளை, பறவைகளை, நீர் வாழ் உயிர்களை, இன்னும் பலவற்றை. அவற்றில் ஒன்றில்கூட மனிதர்களை காண முடியாது. ஏனெனில் மனிதர்கள் வெளியிலிருக்கிறார்கள்!








பின்குறிப்பு:
1.
பூமி பிறந்து நீண்ட நெடுங்காலத்திற்குப்பின் வந்தவர்கள் 

'நாமெல்லாம் ஆரியர்!'

"இல்லையில்லை, திராவிடர்!. பார், கோண்டு மக்கள், தொல்குடியினர், தெலுங்கு கலந்து பேசுகிறார்கள்! அவர்களும் திராவிடரே!"

என அவரவர் கட்சிக்கு கூட்டம் சேர்க்க, அறிவியல் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா?!

"கோண்டு மக்களும், ஒரிசா/பீகார் பழங்குடியான முண்டா மக்களும் மரபணுவில் ஒற்றுமைகள் அதிகமுள்ளவர். வேறு எந்த இந்திய இனத்திலும் இவர்கள் அளவு மரபணு ஒற்றுமைகள் இல்லை."

!

'கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த' தமிழ்க்குடியின் எஞ்சியிருக்கும் பழங்குடி மக்களின் மரபணுக்களும் இந்த ஆராய்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை!



2. பழைய கோண்டு ஓவியங்களில் ஏன் மனிதர்கள் இல்லை தெரியுமா?! அவர்களைப்பொருத்தவரையில் நாமும் விலங்குகளில் ஒன்றுதான், தேவ சிறகுகளும் சாத்தான் கொம்புகளும் பின்னாளில் முளைத்தவை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்