முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளர்க்கு உதவி வேண்டும்!

இது வலிக்கும் நிஜம்...

உரிமைகளுக்காக நம் குரல் ஓங்கி ஒலிப்பது நம் இனத்தின் அடிப்படை குணங்களுள் ஒன்றல்லவா?

அந்தக்குரல் எழுப்புவது சத்தமா சங்கீதமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

நேற்று ஆடி முதல் நாள். பழமைமிகு நம் மரபில் (ஆதியில் அனைவரின் மரபும் ஒன்றாய்தான் இருந்தது) இது வேளாண் பணிகளை இறை வேண்டி துவங்கும் பெருநாள்.

இந்த ஆடி மாத உழைப்புதான் வரும் மாதங்களில் சோறு போடக்கூடிய விதைப்பு என்பதால், புது இணை மோகம்கூட குறுக்கிடக்கூடாதென்று ஆடியில் கணவன்-மனைவி பிரிந்திருப்பது இதற்காகவேதான் (ஆடியில் கரு உருவானால் கோடையில் பிரசவம். தவிர்க்கவே பிரிவு என்பது பின்னாளில் வந்தது).

நாம் ஆடிப்பிரிவை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது போல் நம்முடனே வாழ்ந்து அடிப்படை வாய்ப்புகள் / உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், எந்த வேற்று மதக்கதவுகளை தட்டி அடைக்கலமானாலும், இந்த ஆடி முதல் தினத்தை இன்றுவரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், மாரியம்மனுக்கு / மேரியம்மனுக்கு கூழ் காய்ச்சி. (ஆடியில் தொடங்கும் வேளாண் பணிகள், அவர்கள் வீட்டிலும் வரும் மாதங்களில் உலை கொதிக்க உதவும்!).

மத மாற்றம், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்க்கு வடிகால் போல தோற்றமாயை தரும் ஒரு exploitation channel. அவ்வளவுதான். வடகிழக்கு மாநில மக்களை நம் வணிக நிறுவனங்கள் 'பயன்படுத்திக்கொள்வது' போல.

இப்படி, நம் மரபின் எச்சங்களான நாம் அனைவரும் எந்த எச்சம் பெரிது என இந்த தளத்திலும் முஷ்டி மடக்குவது, வெறுப்பு உமிழ்வது, சத்தமா சங்கீதமா?

சிக்கலின் நுனி கண்டுபிடித்து அவிழ்க்கவேண்டிய நாம், எந்த பேன்ட் எய்ட் நல்லது / உசத்தி என திசை மாறி...

கேபிடலிச கடவுள் ஒருவர் மட்டுமே சாதி, மத, இன, மொழி வேற்றுமைகள், உயர்வு தாழ்வுகள் பார்ப்பதில்லை.

உலகின் அனைத்து மதங்களும் போதிக்க போராடும் செய்தி 'அனைத்துயிரிடமும் அன்பு செய்'! 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் எல்லா கடவுள்களும் சொல்லும் இந்த எளிய செய்தி, ஏனோ மேலான வாழ்வு வாழும் மனிதகுலத்திற்கு இன்றுவரை புரியவில்லை.

குறுகிய வட்டம் விட்டு வெளியே வந்து எல்லையற்ற வானில் பறக்கத்தொடங்குங்கள். உங்கள் அனைவரின் வாழ்வு, வரம். 

கடவுளரின் எளிய செய்தி உங்கள் வாழ்வின்வழி பரவட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...