முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாழ்திறந்தது பூங்கதவு!



#onemoresong

ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்.

கிதார் இசைஞன்.

உலக கிதார் இசையில் எரிக் கிளாப்டன் போன்ற ஆளுமைகள் உச்சம் தொட்டபின் அடைவதற்கொன்றுமில்லை என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில் (பின் 60 களில், முன் எழுபதுகளில்) 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்' என ஒற்றைக்கிதாருடன் உலகை வெல்லக்கிளம்பியவன், வென்றவன், கருப்பினத்திலிருந்து.

இந்தப்பதிவு அவனைப்பற்றியல்ல.

பின் எழுபதுகளில் 'நம் தமிழ் (திரை) இசை உச்சம் தொட்டாச்சி, இதற்கும் மேல் ஒன்றுமில்லை, என மக்கள் மயங்கியிருந்த தருணத்தில் ஒற்றை கிதாருடன் இங்கும் ஒருவன் முளைத்தான், 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்!' என்று, ஒரு சிற்றூரிலிருந்து.

நுழைந்த இரண்டாண்டுகளுக்குள் அவன் தொட்ட உச்சம்... வேற லெவல்!

முகவரியற்றவரைக்கூட மந்திரக்கம்பளத்தில்  ஏற்றி பறக்கவைக்கும் வித்தையில் அவனை வெல்ல யாருமில்லை.

பாரதிராஜா அவனுடன் இணைகிறார். மூன்று புது நடிகர்கள் நாயகர்களாக, ஒரு புது நடிகை நாயகியாக, ஒரு புது கவிஞர் பாட்டெழுத என இந்த மந்திர வித்தைக்காரனை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார்.

கவிஞருக்கு இவனைப்பற்றிய பெருவியப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் பாடல் ஒன்று பிறக்கிறது. இப்பாடலில் கவிஞர் விவரிப்பது இசைக்கலைஞனை, வாழ்த்துவது அவனை மட்டுமே!

தன நன.... தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா... தன நன..நன.... நா...
தன நன... நா... தன நன..நன.... நா...


ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே


புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....

லல... லா... லல... லலலா.... 
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....லல... லா... லல... லலலா...


மனம் மகிழ்ந்த அந்த இசைஞன், ஒரு பொன்மாலைப்பொழுதில் பூங்கதவை தாழ்திறந்து விட, கவிஞனும், படைப்பாளியும் இறங்கி அடிக்க, உயர உயர பறக்கத்தொடங்கியது இசைக்கம்பளம்.

அதன் விளிம்புகளில் தொங்கியவண்ணம் பயணம் செய்த ஏனைய புதியவர்களும் அவர்களால் முடிந்த உயரம் தொட்டனர். அந்தக்கவிஞன் மட்டும் சரியாசணம் பெற்றான் கம்பளத்தின் மீது!



கவிஞர்களின் பின்னே இசையமைப்பாளரும், நாயகரும் டைரக்டரும் அலைந்த காலத்தை தொலைந்த காலமாக மாற்றி, இசையின் பின்னே அனைவரும் என 
புதிய காலத்தை கட்டியம் கூறி வரவேற்றது இம்மூவர் கூட்டணி. (இசையா பாடலா என பின்னாளில் பிளவுபட இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்...)

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....

எண்ணம், எழுத்து, காட்சி, இசை!

சந்திரசேகர் இப்பாடலில் ஒரு குறியீடு மட்டுமே!
60-70களில் அமெரிக்க ஹிப்பி மற்றும் ராக் இசை புரட்சியின் தாக்கம், ஹாலிவுட் ஸ்டைலில் கேமரா ஆங்கிள் என என்று பார்த்தாலும் Throwback Years! இன்றளவும் இப்பாடல் கேட்கையில் தோன்றும் உற்சாகம், வேற லெவல்!
#onemoresong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்