முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிரு


மரங்கள் இலையுதிர்க்கும்
பூவுதிர்க்கும் கனியுதிர்க்கும்
கனி விதையாகும் 
விதை துளிராகும்
துளிர் மரமாகும்
பல்லுயிர் வளர்க்கும்.

பறவைகள் இறகு(உ)திர்க்கும் 
மீண்டும் வளரும்
வலிவுகூட்டி பறக்கும்
பழம்தேடி உண்ணும்
எச்சமிட்டு வாழ்த்தும்
காடு வளர்க்கும்.

விலங்குகள் மயிருதிர்க்கும்
மீண்டும் வளரும்
பருவத்தோடு ஒத்தோடி,
ஓடுமிடமெல்லாம் வயிற்றில்
காடுசுமந்து கழித்து
கழித்தது முளைக்கும்.

மனிதர்கள் மயிருதிர்ப்பர்
மயிர்போல் பண்பு(உ)திர்ப்பர்
அன்புதிர்ப்பர் ஏனைய
அனைத்தும் உதிர்ப்பர்
பேராசை பெருநுகர்வு
கடவுளரின் காலடியில்.

பூமியின் ஓட்டில்
அனைத்தையும் உதிர்த்ததும்
கடவுளர் குளிர்ந்து
உதிர்த்தது ஒன்றேனும்
திரும்பப்பெற வரம்
தரலாமென இறைவிரும்பி
மகிழ்ந்து வினவ
...
மயிர் கேட்பர்
...
மயிர்மட்டுமே கேட்பர்!

(உணவுப்பயிர் காக்க நஞ்சு கலந்து, உணவையே நோயூக்கியாக மாற்றி விளைச்சல் அபாரம் அற்புதம் என மார்தட்டி ஏறு நடை போடும் நம் பேராசையில் நசுங்கும் இந்தக்குழந்தைகள், நம் நிலங்களில் 'நம் உணவு நமக்கு மட்டுமே' என பிறவுயிர் அழிக்க நாம் தினம் இட்ட என்டோசல்பான் நஞ்சு சுட்ட நம் பிஞ்சுகள்...)

(என்டோசல்பான் என்பது உலகளவில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட உயிர்க்கொல்லி. நாம் சந்தையில் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களெல்லாம் இந்த உயர்க்கொல்லி குடும்பத்தின் ஏதேனும் ஒரு உறுப்பினரால் ஆசீர்வதிக்கப்பட்டவையே ).

மயிரு என்பது நல்ல சொல்தான்; நாம்தான் அதையும் கெடுத்துவிட்டோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...