முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேர்ல என்னங்க இருக்கு குப்பிபாய்!


குப்பிபாய் என்ற பெயர் கொண்ட நட்பு, பெயர்க்காரணத்தை இவ்வாறு சொன்னார்:

அவருக்கு முன்னே நாலு... பொறந்து ... தங்கவே இல்லயாம். பொறக்குற குழந்தைய நாலு வீட்டு குப்பயில உருட்டி, குப்பைன்னு பேர் வச்சா காலனும் நெருங்கத்தயங்குவானாம் இப்படி குப்பை பாய் என்ற தன் பெயர் மருவி குப்பி பாய் ஆச்சாம். ஒரே முறை பேர மாத்தலாம்னு நினைச்சதும் உடம்பு படுத்து சீரியசாகி குழந்தை மனது தவறை வருந்தி வேண்டவும் சரியாச்சாம்.

இதுபோல பல பல காரணங்களை ஒளித்துவைத்திருக்கும் நம் பெயரில் அப்படி என்னதான் இருக்கு?

--------------

'மாப்ள, குலதெய்வம் பேர்ல ஆரம்பிங்க' 

'மச்சான், பேர்ல தங்கம் வர்ற மாதிரி வைங்க' 

'தம்பி, புது மாதிரி பேரு மூணு சொல்றன், அதுலதான் சூஸ் பண்ணனும். ஆமா' 

'என்னங்க, உங்க அக்கா அண்ணா அம்மா அப்பா சொன்னாங்கன்னு அரதப்பழசா எதுவும் வச்சீங்க, நடக்குறதே வேற! மாடர்னா ஆறு பேரு எழுதி வச்சிருக்கன். அதுலதான்!'
-------

'அருணாசலம்?' 

'உள்ளேன் ஐயா!' 

'ஆறுமுகம்?' 

'உள்ளேன் ஐயா!'
...
'லி...???? யார்றா இது 'லிஙமிஞய்??????'



'... உள்ளேன் ஐயா...'

'எந்த ஊருடா நீ? என்ன பேர்டா இது??? நிசமாவே இதான் பேரா!???
...
வாயில என்ன கொழுக்கட்டையா? நாளைக்கு அப்பாவ அழைச்சிட்டு வந்தா, வறலாம். ஒக்காரு!'
--------

'அப்பா... எனக்கு மட்டும் ஏம்ப்பா இப்படி பேரு வச்ச? பசங்கல்லாம் சிரிக்கிறாங்கப்பா, வாத்யாரும் திட்றாரு. நாளைக்கு உன்ன அழச்சிகிட்டு வந்தாதான் உள்ள விடுவாராம்!' 

'அழாதடா கண்ணா, கண்டிப்பாய் வரேன்'
-------

லிஙமிஞய் தகப்பன் மீது மாளாக்கோபத்தோடே வளர்ந்தான். பெரியவனாகி 'கூட்டுக்குடும்ப அச்சில்' சுற்றிய தகப்பனின் தளைகளை, அடுத்த தலைமுறை குழந்தைகளின் பெயர்களில் உள்ள அந்நியத்தன்மையை உணரும் வரையில்.
பின்னொரு நாளில் 'Vow, What a unique and universal name!' என உலகத்தோழர்கள் பொறாமையில் சிறப்பாய் வாழும் லிஙமிஞய் வீட்டை சற்றே எட்டிப்பார்க்கலாம் இப்போது:

'பேருன்னா, அது மண்ணோட சம்பந்தப்பட்டதுடா, பேர சொன்னாலே ஊர சொன்ன சமுதாயமடா, ஊரையும் தாண்டி மனசுக்கு நெருக்கமான பலதும் அடங்கினது' என பேரன் 'அதிலமாய்' யை கொஞ்சிக்கொண்டிருந்த தாத்தன் தன் பேரனை சமாதானப்படுத்திக்கொண்டிருப்பதை ரசித்தவண்ணம் ப்ளாஸம் பாபிக்குட்டி என்ற மலையாள நண்பருடன் போனில் லிஙமிஞய்!
------

குப்பிபாய்க்கு இக்கதை சமர்ப்பணம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்