முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெய்க்கீர்த்தி!


காலத்தால் அழியாத நல்லவை பல செய்து காலமுள்ளவரை தம் கீர்த்தி நிலைத்திருக்க விரும்பிய வல்லோர், தேர்ந்தெடுத்து செய்தவையெல்லாம் மக்கும் பொருட்களை பயன்படுத்தி மட்டுமே. அவர்கள் படைத்தது என்றாவது மறைந்தே தீரும். அவர்களது கீர்த்தி மட்டும் மனிதகுலம் உள்ளவரை நீளும். கரிகாலனுக்கும் அதுவே, ராசராசனுக்கும் அதுவே, ரோமப்பேரசருக்கும்
போகருக்கும் இன்னும் அநேகருக்கும் அதுவே.

இவர்கள் இட்ட தடம் இடையில் எங்கோ மாறிப்போக, 'காலத்தை வெல்ல' வழி கண்டோம் யாம் என ஒரு கூட்டம்...

மக்கும் உலகில் மக்கா ஞெகிழியில் (Plastic) சகலமும் செய்து, போதாது என விரைவில் தாவரங்களையும் எட்டுக்கால் பூச்சிகளையும்கூட ஞெகிழி செய்யும் ஆலைகளாய் மாற்றும் முயற்சியில் மக்குக்கூட்டம். இந்த மக்குக்கூட்டத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு!

உலகப்புகழ்பெற்ற ஆஸ்டரிஸ்க்ஸ் காமிக்சில் Asterix and Normans என்று ஒரு கதை. இந்த நார்மன் இன மக்கள் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். பயத்தைப்பற்றி தெரிந்துகொள்வதையே வாழ்நாள் கடமையாக, மலையுச்சியிலிருந்து குதித்தல் (குஷியா இருக்கு!!!! வேற எந்த பீலிங்குமே வர்லை!!!!) இன்ன பிற முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டே இருப்பர்.

Sample: நார்மன் ஓருவர் இன்னொரு நார்மனை அமரவைத்து அவரது தலையில் சுத்தியலால் அடித்துக்கொண்டே இருப்பார். 'வலிக்குது, ஆனா பயம்???? அப்படீன்னா என்னன்னே தெரிலப்பா!, இன்னும் கொஞ்சம் அடி!' என ரத்தம் ஒழுக கூட்டாளி தலையை காட்டிக்கொண்டிருப்பார்!!!

நார்மன்களால் நிறைந்த இவ்வுலகு நமக்கு நாமே தந்துகொள்ளும் சம்மட்டியடிகளால் ரத்தம் ஒழுக சுற்றிக்கொண்டிருக்கிறது, தன் நிறம் மாறிக்கொண்டிருக்கிறது.

ஒருநாள் உலகம் சற்றே, சற்றே தோள் குலுக்கலாம். அந்த நாளில் நாம் எறும்புகள் போலே சிதறி அழியலாம். வீழும்போதும், மரணிக்கும் நொடியில் கூட, 'குஷியா இருக்கே!' என குதூகலிப்பது மட்டுமே நமக்குத்மெரியும். ஏனெனில் நாம் நார்மன்ஸ்! 

Yes, We are

.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்