முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரத்தம் ஒரே நிறம்.


எல்லைக்கு இருபுறமும் இஸ்லாம். சுட்டது இஸ்லாம், சுடப்பட்டது இஸ்லாம். மரித்தது மனிதம். சிந்தியது என் ரத்தம். நம் ரத்தம். நாடு என்ற நிலப்பரப்பில் ஊடாடும் கோட்டுக்கு இருபுறமும், இடையறாமல்.

என் பாதுகாப்புக்கு, பல நூறு கோடி மக்களின் பாதுகாப்புக்கு, அரவான் களப்பலி மட்டும் நித்தம்.

கொட்டிய குருதியில் உன் குருதி எது? என்னது எது?

ஆளும் கட்சி எதிர்கட்சி பூசல், கிரிக்கெட், பெற்றோர் உற்றாரை காணப்போகும் மகிழ்ச்சி, பண்டிகை நினைவுகள், எதிர்காலம் பற்றிய ஆசைகள், கவலைகள்... எல்லாவிதத்திலும் நீயும் எங்களுள் ஒருவன்தானே?

உன்னை கடத்தி நெற்றியிலும் கழுத்திலும் சுட்டவனும் எங்களுள் ஒருவன்தானே?

நிலக்கோடுகள் மனிதர்களை பிரிக்கலாம், ஆனால் மனித உணர்வுகளை மாற்றும் ஆற்றல் பெற்றவை அல்ல. கோட்டுக்கு அப்புறமும் உனக்காக கண்ணீர் துளிகள் தரையிறங்கும்.

பண்டிகை கொண்டாட்டத்திற்கு விடுப்பில் கிளம்பிய நண்பா, உன்னை சுட்டவனும் இன்று கொண்டாடுவான்; இறை ஏற்குமா?

உண்ட சோறு செரிக்கவில்லை. நினைவில் உன் கிராமத்து வீட்டின் மரண ஓலம்... என்னுள் விழுந்த எத்தனையோ விதைகளில் நீயும் ஒருவன்; என் சிந்தனை வழியே என்றாவது உன்னை நீட்டிப்பேன்...

சுட்டவனும் உன் இடம் தேடி வருவான் பின்னொரு நாளில். அங்காவது வன்முறை நிகழாமல் இருக்க எந்த இறையை இறைஞ்சுவது என்று தெரியவில்லை...

இதை எழுதி முடிப்பதற்குள் பிகாஸ் குருங் எனும் நண்பன் நீ இருக்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறான்...

மதங்கள் தோன்றிய நாள் முதலாய் அவை அனைத்தும் கதறிக்கதறி சொல்லிக்கொண்டிருக்கும் ஒற்றை செய்தி "அனைத்துயிரிடமும் அன்பு செய். அன்பே இறை"

இது ஏன் இன்னும் நமக்குப்புரியாமலே இருக்கிறது? காதுகள் அடைபட்டாலும், கண்கள் கட்டப்பட்டாலும் குருதி வாசம் உணராதவையா நம் நாசிகள்?

என்று தணியும் இந்த குருதித்தாகம்?

(இது என் நீத்தார் நினைவுக்கடன். தயதயவு செய்து பின்னூட்டம் தவிருங்கள். எதற்கென்று தெரியாமலே இறந்து போன இந்த நண்பனுக்காக, யுத்தங்கள் இல்லாத, மதங்கள் அல்லாத எதிர்கால நல் நிலப்பரப்பில் நம் சந்ததியினர் இணக்கமுடன் வாழ உங்கள் எண்ணங்களில் விதையுங்கள். மானுடம் தழைக்கட்டும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்