முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போராடுவோம்!



போராடுவோம் போராடுவோம்!


'அம்மா, மூச்சு விட சிரமமா இருக்கு'

அறுபது வயதை கடந்தவர் மட்டுமல்ல, ஆறு வயதை கடந்தவர்க்கும் இதே.

இத்தனைக்கும் இருப்பதென்னவோ பெரு நகரில் ஏராளமாய் மரங்கள் சூழ்ந்த Gated Communities  எனப்படும் 'மதில் சூழ்ந்த குடியிருப்புக்களில்.

பாதிக்கப்பட்டவர் பலர் சமுதாயத்தில் மேல்-மத்திய மற்றும் மேல்தட்டு குடும்பங்கள்...

'டாக்டர், வாக்கிங், ஸ்விம்மிங், விளையாட்டு எல்லாம் பண்றோம், பசுமையான சூழல்ல. ஆனாலும் மூச்சு முட்டுது'.

ஆராய்ச்சிகள் பல செய்து அநேக டாக்டர்கள் எழுதித்தருவது ஆன்டி அலர்ஜிக் மருந்துகள். இதிலும் ஆங்கில மருந்துகள் மற்றும் நாட்டு மருந்துகள் வித்தியாசம் உண்டு.

ஐயன் என்ன சொன்னார்? 'நோய் நாடி நோய் முதல்நாடி தேடு' என்றார். ஆனால் மருத்துவர்கள் நாட முயல்வதில்லை. ஏனெனில் இந்த நோயின் இன்றைய முதல்நாடி அவர்களின் கண்களில் பட்டாலும் சிந்தனையில் படிவதில்லை!

Gated Communities, பசுமை சூழலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என கடந்த பத்தாண்டுகளில் உருவானவை அனைத்திலும் காணப்படுவன வரிசை வரிசையாய் செழித்து வளர்ந்து நிற்கும் 'அழகுப்பனை' மரங்கள். பெரும்பாலும் ஆண் மரங்கள்...

மகரந்தம் சேர்ந்ததும் வர வேண்டிய தேனீக்கள் எவ்வளவு வேகமாய் வந்தாலும் எத்தனை தொலைவு பறந்தாலும் பெண் இணை-பனை மரங்கள் இல்லாமல் இயல்பாய் நடக்கவேண்டிய மகரந்தச்சேர்க்கை நிகழ்வது தடைபடுகிறது. அவை தம் கால்களி்ல் சுமக்கும் மகரந்தங்கள் 'எதிலும் சேராமல்' உதிர்ந்து காற்றில் பரவி அடைக்கலமாவது நாசி வழியே நம் நுரையீரலில்!

அழகுப்பனை மரங்களை அடியோடு தவிர்த்து பல்வகை உள்ளூர் மரங்கள் நட்டு வளர்த்தால் மட்டுமே நம் நுரையீரல் நிம்மதியாய் மூச்சுவிடும்!! அதுவரை ஆன்டி அலர்ஜி மருந்துகளோடு போராடுவோம்ல!

'அடுத்த வாரம் அபார்ட்மென்ட் ஓபனிங். இருநூறு ஆர்னமென்டல் பால்ம் சொல்லருக்கேன். ஒன்னொன்னும் 12 அடி யு நோ? பாக்கவே வரிசை வரிசையா அவ்ளோ அழகா இருக்கும். வீட்டுக்கு ஒரு லட்சம் சேத்து கேட்டாலும் தே டோன்ட் மைன்ட்!'

தீதும் நன்றும் பிறர்தர வாரா!

பின்குறிப்பு: இதைப்படித்தபின்பாவது உங்கள் வீட்டில் / அருகில் இருக்கும் அழகுப்பனைகளில் பறவைகள் பூச்சிகள் ஏதேனும் உணவு தேடி என்றாவது வருகிறதா? அமர்கிறதா? என கொஞ்சமாவது கவனியுங்களேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...