முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மந்திரச்சட்டை


அந்த சட்டை போட்டா மட்டும் மனசுக்கும் உடம்புக்கும் என்னமோ ஆயிடுது...
என் தோரணை மாறி, சிந்தனைகள் மாறி... கண்ணாடியில் முகம் கூட மாறிப்போனாற்போல்...

அந்த சட்டைக்குள்ளிலிருந்து நண்பர்களிடம் பேசுகையில் என் கையசைவு கூட என்னது மாதிரி இல்லை...

இருபது முப்பது வருடங்களுக்கு முன் இது நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒன்றின் வளர்ச்சி நின்று, இன்னொன்றின் வளர்ச்சி கூடி, அதுவும் நின்று... இதோ மந்திரச்சட்டை நிகழ்ந்தது இவ்வாறுதான்.
---------------
'ஏம்மா, என் சட்டை ஒண்ணு... எங்க போச்சின்னு பாத்தியா?... கொஞ்ச நாளாவே காணல...'

தேவைகளில் மட்டுமே நிறைவு பெற்று, ஆசைகளே அவசியம் இன்றி, மினிமம் எக்சிஸ்டன்ஸ் அவர், அன்றும் இன்றும். ஒழுங்கமைத்துக்கொண்ட வாழ்வு, சிம்பிள் கோட்பாடுகள் ஆனால் எஃகை விட உறுதி. வேகமாய் மாறிவரும் நடைமுறைக்கு 'ஒவ்வாத'  கொள்கைகளாக பிறருக்கு தோன்றுவதைப்பற்றி கவலை அவருக்கு என்றுமே இல்லை. கதர் ஆடைகள் மட்டுமே, அதுவும் சொற்பமாய் தேவைக்கு மட்டும். அதில் ஒன்று காணோம்!

அவர் அடியொற்றி நடக்கும் மனைவி; தனி விருப்பு வெறுப்பு கிடையாது; தனி சிந்தனை கூட சந்தேகம்தான். முகங்கள் கூட இருவருக்கும் ஒரே சாயலாய் மாறிப்போச்சு, 48 வருட தாம்பத்யத்தில்.

'ரெண்டு மாசம் முன்ன பையன் வீட்டுக்கு போய்ட்டு வந்தம்ல, அங்க இருக்கும்ங்க'
-----------

எலே வேங்க மவன் ஒத்தையில நிக்கேன், என் அப்பன் சட்டைக்குள்ள!!!!

(மண்ணில் நான் உந்தன் நகலல்லவா என நா. முத்துக்குமார் just like that எழுதிட்டு போய்ட்டார்...)

கருத்துகள்

  1. மந்திரக்காேல் என் கைவசம்.தேங்காய் ஓடும் என் முன்னே கை, கால் முளைத்து தலை முடி காற்றில் பறக்க கண்,மூக்கு, வாய் என அனைத்தும் தேவையான அசைவுகளுடன் பெற்று, நா.முத்துக்குமாரின் நல்ல பாடல் ஒன்றுக்கு நடனமாடும்: பார்த்துக்காெள்.சாெல்லாமல் சாெல்கிறது இந்த 'பாேஸ்ட்'! கதை சாெல்ல நன்றாக வருகிறது!!

    பதிலளிநீக்கு
  2. சிறகில் வலிவுள்ள மட்டும்,
    சூரியப்பழத்துக்கு எதிர் திசையில் (இன்னொரு சூரியனை காணும் வரையில்) பறந்துதான் பார்க்கலாம் என... :+)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்