முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லோரும் நாவிதரே!

 ஒன்றே குலம் ஒருவனே இறை.
இந்த ஒற்றைக்குலத்தின் கல்வி 'இயற்கையிடமிருந்து வாழ்வியல் கற்றல்'.
இக்குலத்தின் தொழில் 'இயற்கையோடு வாழ்தல்'.
இதற்குத்தேவையான பயிற்சி ஒவ்வொன்றையும் இன்னார்தான் செய்யவேண்டும் என யார் செய்த விதியோ இன்று நம்மை எட்டி உதைக்கிறது; பல வழிகளில்.
சற்றே எட்டிப்பாருங்களேன் தைரியமாய்:
'பைப்பு லீக்காவுதுன்னு ப்ளம்பர கூப்ட்டா அரை மணி நேர வேலைக்கு லேபர் மட்டும் ஐநூறாம்! தலையெழுத்தேன்னு கொடுத்தேன்'
'சட்டைல பட்டன் பிஞ்சிடுச்சின்னா புதுசு வாங்கிடலாம்போல; டெய்லர் எவனும் காஜா வேலைக்கு ரெடியில்ல, ஆயிரம் ரூவா சட்டை... கடாசிட்டேன்'
'ரிமோட்டுல பேட்டரி ஸ்ப்ரிங் போச்சி. மாத்திட்டு வாடான்னு பையன்ட்ட குடுத்தேன். ரிமோட்டையே மாத்திட்டான்'
'சைக்கிள்ல காத்து இறங்கிடுச்சி. முக்கு கடைல காத்தடிச்சிட்டு வாடான்னா தள்ட்டுபோவ அலுத்துக்குறான்'
'இட்லி தோச மா சூப்பர் மார்க்கெட்ல பிக்அப் பண்ணிடுவம். வீட்ல அறைக்கிறதில்ல, லெபோரியஸ் ப்ராசஸ் யு நோ!'
'பைக் ஸ்டார்ட் ஆவல. உதைச்சே இடுப்பு கழண்டுடுச்சி; கார்பரேட்டர் அடைச்சிருக்கும்னு நெய்பர் சொன்னாரு. நாளைக்கு மெக்கானிக் வருவான்'
எந்தக்கல்வி இதை மாற்றும்? குலக்கல்வி என கடிவாளமிட்ட குதிரைகளாய் நாம் ஓடும்வரை நம் வீட்டு சாக்கடை அடைத்து நாளாகி முடை நாற்றமடித்தாலும் இறங்கி சுத்தம் செய்யமாட்டோம், ஏனெனில் நாம் அந்தக்கல்வி கற்கவில்லை.
உலகின் வயது வந்த ஆண்கள் அனைவரும் நாவிதம் பழகாமலா இருக்கிறோம்? அதனால் நாம் அனைவரும் நாவிதர் என்றாகுமா?
மேலை நாடுகளில் முடிதிருத்த நம் பணத்தில் 1500. உள்ளூர் பணத்திலும் அதிகமே என்று கத்தரிக்கோல், ஒட்ட வெட்டும் மெசின் வாங்கி வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் முடி திருத்திக்கொள்கிறார்கள்!'
குலக்கல்வி என்பது நமக்கு தினசரி வாழ்வில் தேவைப்படும் வேலைகளை நாமே செய்யப்பழக்குவதாகத்தானே இருக்க வேண்டும்?
நம் தேவைகள் குறைந்துகொண்டே வந்தால் ஏதேனும் ஓரு புள்ளியில் இயற்கைப்பள்ளி நம்மை உள்ளிழுத்து தேவையனைத்தையும் நாமே செய்ய கற்றுத்தரும்.
அதுவரை இந்த (இயற்கை) ஆசிரியர் மாணவருக்காய் காத்துக்கொண்டே இருப்பார். இந்த திறந்த வெளி பள்ளி திறந்தே கிடக்கிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...