முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒவ்வொரு நொடியும்...


ஒவ்வொரு நொடியும் அமுது!

முப்பத்தேழு வயது. மனைவி, 5 வயதில் பெண் குழந்தை. மண்ணில் சொர்க்கம் எனப்படும் சுவிட்சர்லாண்டில் வாழ்வு; பிறப்பால் இத்தாலியன்.

'டெர்மினல் கேன்சர். Get ready' - ஒருநாள் உடல் நலம் இன்றி மருத்துவரிடம் சென்றபோது அவர் எதிர்காலம் கணித்துச்சொன்னது.

அவன் அதை எதிர்கொண்ட விதம், எனக்கு வாழ்நாள் பாடம்... 

அலுவலகம் எப்போதும் போல் முழுதேர வேலையை தொடர்ந்தான். ஆனால் ஒவ்வொரு நொடியையும் அமுதமாய் பருகும் மனநிலையில் (அலுவலகத்திற்கு வெளியேயும் அவ்வாறே). பாசிடிவ் எனர்ஜியை நான் கற்றுக்கொண்டது இறந்துகொண்டிருந்த ஒரு மனிதனிடம்.
உதாரணம்: எந்த நொடியிலும் புற்று வெடிக்கும் நிலையில், மூன்று மணிநேர மீட்டிங் முடித்து தன் மேசைக்கு திரும்பி, மீட்டிங் டாகுமெண்ட்டை காதருகில் கொண்டு சென்று கண் மூடி மெதுவாய் மிக மெதுவாய் 'டர்ர்ர்' ரென்று கிழித்து, கிழியும் ஓசையை துளித்துளியாய் ரசித்துக்கொண்டிருந்தபோது நான் அவன் எதிரில் அமர்ந்திருந்தேன். துரத்தும் மரணம் அவனை தோயாளியாக்கமுடியவில்லை். அவன் ஒரு பத்து வயது சிறுவன் விழி விரிய உலகை உள்வாங்குவது போல்...

அடுத்த சில ஆண்டுகள் அனைத்து மேற்கத்திய மருத்துவ முறைகளையும் முயன்று தோற்று, ஆசிய இந்திய முறைகளையும் முயன்று பலனின்றி அவன் எடுத்த முடிவு 'என் மரணம் என் விருப்பப்படி'. கருணைக்கொலை அல்ல; மருத்துவமனையில் சுற்றமும் நட்பும் சூழ, மருந்து தவிர்த்து, உணவு, நீர் தவிர்த்து மெல்ல மெல்ல விடைபெற்றான்.

அவனது மனைவியும் 8 வயது மகளும் அவனுக்கு மிகப்பிடித்த ஒரு சிறு குன்றில் அவனது சாம்பலை தூவி அவர்கள் குடும்பமாய் நட்டு வளர்த்த ஒரு மரத்தடியில் டென்ட் அடித்து 'நினைவேந்தல்' நடத்தினர் அவனை நன்கு அறிந்தவர்களுடன்.

என் வாழ்நாளில் இதைப்போன்றதொரு மகிழ்வான விழா, நான் கண்டதில்லை.

அவனுக்கு பிடித்த பாடல்கள் ஒலிக்க, அவனுக்கு மிகப்பிடித்த உணவு வகைகளோடு, அவனைப்பற்றிய அனுபவங்களை, அவன் தம்தம் வாழ்வில் எப்படி நிழலிட்டு / வெளிச்சமிட்டுச்சென்றான் என்பதை 'நமக்கு மிகப்பிடித்த ஒரு நாயகனை சிலாகித்து நம் நினைவுகளை நட்புக்களுடன் பகிர்வது போல', அப்படி ஒரு கனிந்த மகிழ்வு அந்த இடத்தில்.

அந்த மரத்தின் தாழ்வான கிளையொன்றில் மிஷல் அமர்ந்து கால்களை தாளகதியோடு ஆட்டிக்கொண்டே இவற்றை மிக ரசித்திருப்பான் எனத்தோன்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்