முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலும்...


ஒற்றைப்பார்வையில் காதலாகி அப்பவே முடிவு பண்ணியாச்சி; 'ஸ்டெல்லாதான் எனக்கு wife ஆ வரணும்'.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவளுக்கு நிகர் யாருமில்லை!
சின்ன சிக்கல் 1: அவனுக்கு வயது அஞ்சி.
சின்ன சிக்கல் 2: அவள் வயது பத்தொன்பது!
பெரிய சிக்கல் 1: அலங்காரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிகிட ஆசை.
பெரிய சிக்கல் 2: அலங்காரம் வீட்டுக்காரரும் ஓகே சொல்லிட்டாரே!
கிண்டர்கார்ட்டன் எல்லாம் வராத சிற்றூரில் பேபி கிளாசில் அவன் சேர்ந்த முதல் வாரத்திலயே ஸ்டெல்லா டீச்சர் மேல மையலாச்சி!
அது பசங்க வழியா பள்ளிக்கூடத்துல வைரலாச்சி. அதுனால அந்த துறுதுறு பையனை 2 ஆம் வகுப்பு டீச்சர் அலங்காரத்துக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி.
அவனோட கல்யாண கனவுகளை நொறுக்குறதே அலங்காரத்துக்கு பொழப்பா போச்சி. இஸ்கூல் காரிடாரில் எங்க எப்ப பாத்தாலும் 'எப்ப கண்ணாலம் கட்டிக்கலாம்'னு தொரத்திகிட்டே இருந்தா பாவம் பையன் என்ன செய்வான்? உச்சா ப்ரேக்கு கூட எடுக்காம எத்தனை நாளு காலம் தள்ளுறது?!
சின்ன மனசு, எம்புட்டு பாரந்தான் சொமக்குறது? என்னா பண்ணலாம்னு யோசனை பண்ணா ஒண்ணுமே தோணமாட்டேங்குது.
திகிலுடனே நாட்கள் கழிய க்ளைமாக்சும் வந்தது... 'திங்கள் கிழமை கல்யாணம். ஓகேவா?!' என வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஸ்கூல் முடிந்து காரிடாரில் அலங்காரத்தை க்ராஸ் பண்ணுகையில் அவர் கொளுத்திப்போட... பொட்டுத்தூக்கமில்லை வீக்கெண்டுல!
'அப்பாகிட்ட சொல்லிடலாமா?... அடிப்பாரே... வேணாம்...
உடம்பு சரியில்லன்னு லீவு போட்டுடலாமா? அப்பா கண்டுபுடிச்சிடுவாரே...'
வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது தெருமுனையில்; அரை டவுசரில் நண்பர்கள் அனைவரும் ஆஜர். ஏகப்பட்ட விவாதங்களுக்குப்பிறகு(!) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; 'சொல்லிடு; புடிக்கலன்னு சொல்லிடு. சொல்லிட்டு நிக்காம எங்கணா ஓடிடு!'.
இப்படியாக நண்பர்களால் தைரியம் பெற்றவன் பதுங்கிப்பதுங்கி திங்கள் காலையில் பள்ளியில் நுழைந்தான்...
ஆச்சி, சாயங்காலம் ஆச்சி. அலங்காரத்தை காணோம்!
ஏகப்பட்ட குழப்பங்களோட வீடு திரும்பினவன் நிம்மதியா தூங்க ரெண்டு நாள் ஆச்சி, 'அலங்காரம் டீச்சர் ஸ்கூல் மாத்திட்டு போய்ட்டாங்க' என்று அவன் நண்பன் அவன் காதில் சைரன் ஊதினதுக்கு அப்பால! (இந்த நொடியிலும் அந்த ரீங்காரம் காதில கேக்குதே!).
'அப்புறம் என்ன ஆச்சி? ஸ்டெல்லாவுக்குதான் ரூட்டு க்ளியராச்சே' என்கிறீர்களா?
வசுமதி வந்தாச்சே! பேபி க்ளாசில புது பொண்ணு, ஸ்லைட்டா மூக்கு ஒழுகிகிட்டு ஆனா ஜொலிக்கிற அழகோட!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்