முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலாகி...


நான்கு வருடங்கள் முன் அவரை சந்தித்தேன்.

மூத்த பெண்ணை பொறியியல் படிப்பில் சேர்க்க வந்திருந்தபோது. என் தங்கையும் அப்போதுதான் சேர்ந்திருந்தாள்.

இரு பெண் குழந்தைகள். இளையவளுக்கு 10 வயது. 

'Mother வர்லீங்களா?' என்றேன்.

'இல்லைங்க, நாலு வருசத்துக்கு முன்ன இறந்துட்டாங்க' என்றார். 

சிறு டவுன் பள்ளியில் ஆசிரியர். நேர்மையானவர்.  நேசமிகு மனைவி. இரு அன்பான குழந்தைகள். ஒற்றை நொடியில் அனைத்தும் கலைந்தது. 

'உடம்பு சரியில்லன்னாங்க, ஆம்புலன்ஸ் எல்லாம் கூப்டோம். ப்ச்'.

தளரவில்லை, மறுமணம் பற்றிய சிந்தனையில்லை. உறவுகளின் தயவை எதிர்பார்க்காது தனியே வளர்க்கிறார் குழந்தைகளை, பணியில் தொடர்ந்துகொண்டே. பெரியவளுக்கு மெரிட்டில் சீட்.

அட்மிஷன் முடித்து, இரவு, பேருந்து நிலையத்தில் வழியனுப்பினேன். சிறிய கைப்பை மட்டுமே வைத்திருந்தார்.

அவர் பெண்ணையும் என் தங்கையையும் ஹாஸ்டலில் விட்டு திரும்புமுன் தங்கையிடம் 'பாவம் இவர்... குளிர்ல ப்ளாங்கெட் கூட இல்லாம போறார்... ரொம்ப மெல்லிசான க்ளாத்ல ஏதோ ஒன்னு மட்டும் பையிலேந்து எடுத்தார். தெரிஞ்சிருந்தா வீட்லேந்து ஒரு ப்ளாங்கெட் எடுத்து வந்திருக்கலாம்' என்றேன்.

'இல்லண்ணா, அவர் கையில் வச்சிருந்தது அவர் wife ஓட புடவைண்ணா. நைட் ட்ராவல் எப்போ பண்ணாலும் அதைத்தான் போத்திக்குவார்' என்றாள். இதை இப்பொழுது எழுதும்போதும் மனம் நெகிழ்கிறது... 

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஈருயிர் ஓருடல் எல்லாம் தாண்டி திருமண வாழ்வின் தினசரி சிக்கல்களில் குறட்டை விடுவதைக்கூட காரணம் காட்டி டைவர்ஸ் அப்ளை பண்ணும் இதே உலகில், இரவில் மனைவியின் சேலை தரும் அரவணைப்பில் உரையாடி கண்ணயர்ந்து ஊர் சேரும் இந்த மனிதர்... காதல் வெறும் வேதியியல் நிகழ்வு அல்ல என்பதன் சான்றாய்... இவர் ஒரு வேதியியல் ஆசிரியர்!

நொடியில் மாறிப்போன வானம், காலம் இங்கு காதல் நெஞ்சை கீறிப்போகும். ஆனாலும் துடிக்கும் நெஞ்சின் அரவணைப்பில் இன்னும் இரு இதயங்கள் உயிர்க்கும் (look at the picture closely!).

Could only shed a few tears for this g'man.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...