முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலும்...

ஒற்றைப்பார்வையில் காதலாகி அப்பவே முடிவு பண்ணியாச்சி; 'ஸ்டெல்லாதான் எனக்கு wife ஆ வரணும்'. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. ஆனால் அவளுக்கு நிகர் யாருமில்லை! சின்ன சிக்கல் 1: அவனுக்கு வயது அஞ்சி. சின்ன சிக்கல் 2: அவள் வயது பத்தொன்பது! பெரிய சிக்கல் 1: அலங்காரத்துக்கு அவனை கல்யாணம் பண்ணிகிட ஆசை. பெரிய சிக்கல் 2: அலங்காரம் வீட்டுக்காரரும் ஓகே சொல்லிட்டாரே! கிண்டர்கார்ட்டன் எல்லாம் வராத சிற்றூரில் பேபி கிளாசில் அவன் சேர்ந்த முதல் வாரத்திலயே ஸ்டெல்லா டீச்சர் மேல மையலாச்சி! அது பசங்க வழியா பள்ளிக்கூடத்துல வைரலாச்சி. அதுனால அந்த துறுதுறு பையனை 2 ஆம் வகுப்பு டீச்சர் அலங்காரத்துக்கும் ரொம்ப புடிச்சிப்போச்சி. அவனோட கல்யாண கனவுகளை நொறுக்குறதே அலங்காரத்துக்கு பொழப்பா போச்சி. இஸ்கூல் காரிடாரில் எங்க எப்ப பாத்தாலும் 'எப்ப கண்ணாலம் கட்டிக்கலாம்'னு தொரத்திகிட்டே இருந்தா பாவம் பையன் என்ன செய்வான்? உச்சா ப்ரேக்கு கூட எடுக்காம எத்தனை நாளு காலம் தள்ளுறது?! சின்ன மனசு, எம்புட்டு பாரந்தான் சொமக்குறது? என்னா பண்ணலாம்னு யோசனை பண்ணா ஒண்ணுமே தோணமாட்டேங்குது. திகிலுடனே நாட்

Rubber in my Vine!

Seeds, Plant, Flower power all in a single frame! Rubber vine, this is. As if the beauty of its flowers is not enough, the 'seed pack' is precision engineering at its best; a hard triangular outer shell wherein just one side of the pack bursts open when time is right and the seeds parachute out! The curious kid in me got hold of such a pod just before it was 'ready', used a hard knife to splice open the pod...  only to see the seeds and the 'parachutes' kept separately within the tubular single shell structure; the 'parachute' attaches to the seeds probably in the last minute before getting ejected...  Having learnt the invaluable lesson (that Nature knows best when to unpack!) this kid swore never to repeat this experiment :-) PS: Rubber vine is a perennial, ever green, fast growing keeper with beautiful violet flowers that stay fresh for a day or two after plucking when k

காதலாகி...

நான்கு வருடங்கள் முன் அவரை சந்தித்தேன். மூத்த பெண்ணை பொறியியல் படிப்பில் சேர்க்க வந்திருந்தபோது. என் தங்கையும் அப்போதுதான் சேர்ந்திருந்தாள். இரு பெண் குழந்தைகள். இளையவளுக்கு 10 வயது.  'Mother வர்லீங்களா?' என்றேன். 'இல்லைங்க, நாலு வருசத்துக்கு முன்ன இறந்துட்டாங்க' என்றார்.  சிறு டவுன் பள்ளியில் ஆசிரியர். நேர்மையானவர்.  நேசமிகு மனைவி. இரு அன்பான குழந்தைகள். ஒற்றை நொடியில் அனைத்தும் கலைந்தது.  'உடம்பு சரியில்லன்னாங்க, ஆம்புலன்ஸ் எல்லாம் கூப்டோம். ப்ச்'. தளரவில்லை, மறுமணம் பற்றிய சிந்தனையில்லை. உறவுகளின் தயவை எதிர்பார்க்காது தனியே வளர்க்கிறார் குழந்தைகளை, பணியில் தொடர்ந்துகொண்டே. பெரியவளுக்கு மெரிட்டில் சீட். அட்மிஷன் முடித்து, இரவு, பேருந்து நிலையத்தில் வழியனுப்பினேன். சிறிய கைப்பை மட்டுமே வைத்திருந்தார். அவர் பெண்ணையும் என் தங்கையையும் ஹாஸ்டலில் விட்டு திரும்புமுன் தங்கையிடம் 'பாவம் இவர்... குளிர்ல ப்ளாங்கெட் கூட இல்லாம போறார்... ரொம்ப மெல்லிசான க்ளாத்ல ஏதோ ஒன்னு மட்டும் பையிலேந்து எடுத்தார். தெரிஞ்சிருந்தா வீட்லேந்து

காடு

அடர்ந்த பெருங்காடு கையளவு நிலம்.  சிரசளவு ஆகாயம். விழியளவு நீர். நகத்தளவு விதை. ஒரு பிடி கருணை. அவ்வளவே!

ரத்தக்கண்ணீர்

உறவெல்லாம் நஞ்சி போச்சி... 'உனக்கெதுக்கு உறவு? சம்பாதி, ஜாலியா இரு, யாரோடவேணா' காற்று நச்சாகிப்போச்சி... 'சுவாசிக்காதே. மாஸ்க் போடு. ஆக்சிஜன் சிலிண்டர் முதுகில் மாட்டு. சுவாசி' தண்ணீர் விசமாகிப்போச்சி... 'குடிக்காதே, கோலா குடி. குவாட்டர் அடி' குளிக்க, துடைக்க தண்ணி இல்ல... 'குளிக்காதே, துடைக்காதே. சென்ட்டு அடிச்சிக்கோ. பேப்பர்ல தொடச்சிக்கோ' மழைத்தண்ணி பூமிக்குள்ள போமாட்டேங்குது. எங்க பாத்தாலும் ப்ளாஸ்டிக்... 'பாக்காதே. நீ மட்டும் துணிப்பை கொண்டுபோ' மண்ணு நஞ்சாச்சி. சாப்பாடு இல்ல... 'விவசாயம் பண்ணாதே. ஒண்ணும் தின்னாதே. பசியடங்க மாத்திரை போட்டுக்கோ'. மரமெல்லாம் வெட்றாங்க. வெயில் வறுக்குது... 'இன்னும் முடியலை. வெளில வராதே. ஏ.சிக்குள்ள உக்காந்துக்கோ' எல்லாரும் ஏ.சி போட்டா ஓசோன்ல ஓட்ட பெரிசாயிடுமே. இப்படியே போனா பூமி அழிஞ்சிடுமே? 'அழியட்டும். உனக்கென்ன போச்சி? மார்சுக்கு போ'.

தனித்து உரையாடு!

உரையாடல் தனிமையை கொல்லுமாம்! நான் என்னோடு தேநீர் அருந்தும்போதெல்லாம் தனித்திருந்ததில்லை.  நான் என்னோடு உணவருந்துகையிலும் அவ்விதமே. எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும், என்ன செய்தாலும் அப்போது மட்டும் நான் என்னோடு தனிமையாய்!  எந்த மையப்புள்ளியை நோக்கி என் நகர்வு என்பது நான் மட்டுமே அறிந்த ஒன்று, எப்பெரிய கூட்டத்துடன் இணைந்து இசைந்தாலும்.  ஒரு வகையில் கூட்டமென்பது ஒத்திசையும் தனிப்புள்ளிகள்தானே. அகண்ட வானம், இருளுக்கு வழிகாட்டி மின்னும் நட்சத்திரங்கள், மின்மினிப்பூச்சிகள்,  பனிக்காற்று, இலையோசை, சில்வண்டுகள், தவளைகள், ரீங்காரமிட்டு சுற்றிப்பறக்கும் சிறு பூச்சிகள்... என ஏராளமான உரையாடல்களால் பின்னப்பட்ட 'அமைதி'யில் உலகு துயிலும்போது என் தனிமை அகன்று போகிறது. எண்ணற்ற இந்த உரையாடல்களில் என்னால் இலகுவாக உள்நுழைந்து தொடர முடிகிறது, விருப்பமாயும் இருக்கிறது. ஒவ்வொன்றும் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்பதில் கழிகிறது என் 'வண்ணத்திரை' நேரம், நானும் அத்தனை கதைகளின் அங்கமாய். எத்தனை நாளாய் கேட்டும் அலுக்கவில்லை... ஏனென்று ஒருவேளை என்னோடு உரையாடும்