முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல்லயே இல்லயாம்!



சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வரப்போகுதுன்னு அப்பப்ப வர்ற நியூஸ்லாம் 'ஜூஜூபி மேட்டர்', 'ஆச்சின்னா பாத்துக்கலாம்' னு அசால்ட்டா சுத்துவமுல்ல. பல கோடி டூரிஸம் வருமானம் வருகிற தென் ஆப்பிரிக்காவின் கேப் டௌன் மாநகரில் இந்த ஆண்டு ஏப்ரல் 12 இலிருந்து குழாயில் காற்று மட்டுமே வரும் என்ற அரசு அறிவித்துள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களை வலியுறுத்தி  Dos and Dont's லிஸ்ட்டெல்லாம் அரசு அனுப்பிகிட்டிருக்கு. பாத்து வச்சிக்கிங்க. சீக்கிரமே நமக்கும் யூஸ் ஆகும் :-)

"

ஷவர்ல குளிச்சா கைது!

2 லிட்டர் தண்ணில குளிச்சிக்கோ!

ஸ்விம்மிங் பூல் தண்ணிய வடிச்சி டாய்லட்டுக்கும் தொவைக்றதுக்கும் யூஸ் பண்ணு.

மூணு நாளைக்கொரு தபா ட்ரெஸ் மாத்தினா போதும். நாறிச்சின்னா சென்ட்டு அடிச்சிக்கோ!

உச்சா போனா ஒடனே ஃப்ளஷ் பண்ணாத. மூணு உச்சாக்கு (இல்லாங்காட்டி மூணு பேருக்கு ஒரு தபா) ஒரு ஃப்ளஷ் மட்டும்.

கக்கா போனா 2 தபாக்கு ஒரு ஃப்ளஷ் போதும். டயரியா / ரொம்ப கலீஜ்னா மட்டும் ஒடனே ஃப்ளஷ் பண்ணு.

முஸ்லீம் சகா, கால் கழுவாதே! கஷ்டத்த புரிஞ்சுக்கோ!

குடிமகன்களுக்கு:

விஸ்கியோட தண்ணி கலந்தா கொண்டே புடுவன், ராவா அடி!

சரக்கு சாப்புடுற ஹோட்டல்ல தண்ணி குடுக்காத. ஐஸ் க்யூபு குடு.


உடல் பயிற்சின்னு நடக்குறது, ஓடறது, ஜல்சா எல்லாத்தயும் நிறுத்து. அப்பால் தாகம் அடிக்கும்ல...அதனாலதான்!

டூரிஸ்டுன்னு எவனும் வராதே!  தப்பித்தவறி வந்தா 25 லிட்டர் தண்ணியோட வா!

இதெல்லாம் கட்டாயமா ஃபாலோ பண்ணு. இல்லாங்காட்டி கண்டிப்பா ஜெயிலு. 

மனித உரிமைன்னு எவனாச்சும் கொடி புட்ச்சா அடிப்பம். குடிக்கவே தண்ணியில்லயாம், மனுஷ உரிமை என்னா வாழுது!

"

நன்னம்பிக்கை இழந்த முனையிலிருந்து (Cape of Good Hope) இந்தச்செய்தியை பதிவு செய்வது, 'மரநெறி' மார்க்கத்தால் மட்டுமே கேப் டௌனையும், சீக்கிரமே சிங்கிள் டம்ளர் தண்ணிக்கு சிங்கியடிக்கப்போகும் இன்னபிற அகில உலக டவுன், சிட்டி வாழ் மக்களையும் காப்பாற்ற முடியும் என உறுதியாக நம்பும் உங்கள் சகா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்