முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாலு போயி ரெக்கை வந்தது டும் டும் டும் டும்

Venus and Mars by Geraldine Arata

பறவை, வானரம், மொழி...

இறகு சுமக்கும் பறவைகளை என்றும் சுமப்பதென்னவோ இறகுகள்தான். 

வால் சுமக்கும் வானரங்களை வால் சுமப்பதும் உண்டு.

இறகு உதிர்த்த பறவைகள் சில தேவதைகளாய் மண்ணிலிறங்கி உதிர்ந்தவை மேல் கால் வைத்து நடந்த பரப்பெல்லாம் தடம் தோன்றி அதில் முளைத்ததெல்லாம் அற்புதம், அற்புதம் அன்றி வேறொன்றுமில்லை.

புவியெங்கும் பரவி அற்புதங்கள் செய்பவரை மரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த வானரங்கள் தாமும் வால் உதிர்த்து மண்ணிறங்கி கால் பதித்த இடமெங்கும் அழிவுக்கோலம்... திகைப்புடனே தேவதைகளை துரத்தி துரத்தி அற்புதங்களின் 'மூலம்' அறிய அவை வேண்டின.

மொழியற்ற மொழியொன்றில் தொடங்கிய கருத்து யுத்தம் எண்ணற்ற மொழிகளிருந்தும் இன்றளவும் அடைபடாமலே சுற்றிக்கொண்டிருக்கிறது காற்றைப்போல.

புரிதல் இல்லாதுபோயின் விளைவதென்னவோ சந்தேகம் மட்டும்தானே. தேவதைகளுக்கு இது போதுமென கூண்டிலடைத்து சாவியையும் தூக்கி எறிந்து... அது ஆச்சி நெடுங்காலம்.

வேடிக்கை என்னவென்றால் அற்புதங்கள் நிகழ்வது நின்றுபோன உலகில் இன்றளவும் விடுபட இயலாத மனக்கூண்டுகளில் சினத்தோடு சுழல்வதென்னவோ வால் உதிர்த்த கூட்டம் மட்டுமே, மூலம் புரிபடாமலே. 

கூண்டுக்குள் இளைத்த தேவதைகள் சில இறை விளித்து மீண்டும் இறகு வளர்த்து கம்பிகளூடே வெளியேறி புதிய வானில் உயரப்பறந்து எங்கும் நிறைந்திருக்கும் பேருயிர் கண்டு வினவின, 'வானரங்களுக்கு அற்புதங்களின் மூலத்தை உரைப்பதெப்படி?' என.

நகைத்த பேருயிர் சுருங்கச்சொல்லியது 'உரைப்பது தவிர்ப்பீர். உதிர்ந்த உம் இறகொன்றை தந்து வானரங்களை இறகு உணரச்சொல்வீர். அற்புதங்களின் விதைகள் இறகுகளே'.

இப்படி இறகின் மொழி உணர்ந்த சில வானரங்கள் மட்டுமே தவமிருக்கும், கூண்டுகளற்ற வெளியில், இறகுகள் வேண்டி.

பறவையாய் இவையும் மாற இறகுகளை உணர்தலே முதல் படி. அற்புதங்கள் பின்னர் தானே நிகழும். வானரங்களுக்கும் இறகு முளைக்கும், பேரிறையின் விருப்பின்படி!

பின் குறிப்பு:

இறகென்பது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத செயல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...