முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - 3 ஆனை மேல் அம்பாரி!


பல்லவி அனுபல்லவி

மணி பல்லவி!
ராஜ பல்லவி!
(பாலு) மகேந்திர பல்லவி!
அனி(ல்) பல்லவி!

Vow!

டன் டன் டன் டன் டன் டாட டாட டன்
டாடாட டடட டாட டாடாட டடட டாட
டன் டன் டன் டாட டாட டன்...

இந்த ட்யூனுக்கு மயங்காதோர் இந்தியாவில், ஏன் தமிழ் உலகிலேயே இல்லை!

மணி ரத்னத்தின் முதல் படம், கன்னடத்தில், ஹிந்தி அறிமுக ஹீரோவுடன்! அதுவும் அனில் கபூர்! ஆமாம்... அவருக்கு கன்னடத்தில் என்ன வேலை?! 

எப்படி ராஜாவும் பாலுவும் இந்த அறிமுக இயக்குநர் ப்ளஸ் அறிமுக ஹீரோவுடன் வேற்று மொழிப்படத்தில் இணைந்தார்கள் என்ற என் வியப்பு இன்றுவரை குறையவில்லை! (இவர்கள் எல்லோருக்குமே இது வே.மொழி படம்!).

(பின்னொரு நாளில் மணிரத்னத்திடம் இதே கேள்வி கேட்கப்பட்டபோது 'கன்னட அரசு படமெடுக்க நிதி தந்தது... அவங்க சைனீஸ் லேங்குவேஜில இந்த படத்த பண்ண சொன்னாகூட பண்ணிருப்பேன்' என்றார்!)

இளம் காதல் ஜோடி. All set for a happy married life. கல்யாணத்துக்கு முன் அவன் ஒரு வேலையாய் ஒரு மலைப்பகுதிக்கு (Coorg region) வருகிறான். அங்கு single mother லஷ்மி (plus ஓரு சிறு வயது மகன்) உடன் நட்பு பூக்கிறது. பூக்கள் பூத்து காதலாய் மாறலாமா என தடுமாற்றத்தில்...

நட்புக்கும் காதலுக்கும் இடையில் பெண்டுலமாய் அவன் மனது... இவர்களைச் சுற்றிச்சுழலும் நாக்குகள்...இறுதியில் என்ன செய்கிறான்? 

நீங்களே 'கண்டு'கொள்ளுங்கள், YouTube இல், டி வி டி கிடைக்கவில்லையென்றால்!

பாலுவின் ஒளிப்பதிவு காட்டிய அழகிய பேங்களூரை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்!

அனில் கபூரின் natural acting, particularly the frames he shares with Lakshmi's kid, Amazing!

ஒரு frame இல் லஷ்மியின் கூந்தலில் இருந்து உதிர்ந்த மலர்களை scoop பண்ணி எடுப்பார்... ஹையோ!

இந்த  110 நிமிட (!)படத்தின் அருமை பெருமைகள் அறியாமலேயே ஒரு குளிர்கால பனி பொழியும் இரவில் வேற்றுமொழி நாட்டில் இரவு 9 மணிக்கு பார்க்கத்தொடங்கி, பின்னிரவு 3 மணி வரையில்... பித்துப்பிடித்ததுபோல் அந்த music ஐ மட்டும் நூறு முறையாவது கேட்டிருப்பேன்!

டன் டன் டன் டன் டன் டாட டாட டன்
டாடாட டடட டாட டாடாட டடட டாட...

கமல் அண்மையில் இவரைப்பற்றி விகடனில் பகிர்ந்ததை இங்கு பகிர்கிறேன்...
'எங்கள் ராஜா நடந்து வந்தாலும் தவழ்ந்து வந்தாலும் அவர் இசை (யானை) அம்பாரியில்தான் வரும்'.

பின் குறிப்பு 1:  ப.அ.பல்லவி பற்றி பதிவிடுதல் தரும் சுகம்கூட இன்று விளம்பர கத்தரிகளின் இடையே கசிந்து சின்னத்திரையில் நம் இல்லங்களில் வழிந்தோடிக்கொண்டிருக்கும்  'சுமார் மூஞ்சி குமாரு' ரக படங்கள்  தரவில்லையே ஐயகோ!...

பின் குறிப்பு 2: இந்தப்படம் வணிக ரீதியாக தோல்வியைத்தழுவினாலும் இன்றுவரை பேசப்படுவதற்கும் 'அம்பாரி'யே காரணம் என கற்பூரம் ஏற்றி அணைக்க உலகம் முழுவதும் கரங்கள் ஏராளம்!

என் விழித்திரையில் - 2 இல் போஸ்தினோ (தபால்காரர்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்