முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - 3 அகல்யா


அகல்யா, விதவை. யுத்த களத்தில் போர்ப்புகைப்படக்கலை கணவனை இழந்தவள். 

சிவசு, விதவை அம்மாவுக்கு ஒரே பையன். ஊர்க்காரியம் எதுவானாலும் வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் நிற்பவன். மிக நல்லவன். 

ஒரு விதவையைத்தான் மணக்கவேண்டும் என தினசரியில் விளம்பரம் கொடுக்க, அகல்யாவின் கண்ணில் அது பட, அவள் அப்பாவிடம் சொல்ல, அகல்யா சிவசு திருமணம் இனிதே நடக்கிறது.

அகல்யாவுக்கு மாண்டிசோரி முறையில் கல்வி கற்பிக்கும் பள்ளி நடத்த ஆசை. சிவசுவின் முயற்சியால் அதுவும் நிறைவேறுகிறது. 

இனிய இல்லறம். திடீரென இறந்து போன கணவன் முதலில் அவள் கனவிலும் பின்னர் நேரிலும்.

அகல்யா என்ன செய்கிறாள்? சிவசு என்ன ஆகிறான்?
...

விதவை அம்மாவுக்கும் சிவசுவுக்கும் அவன் திருமணத்திற்கு முன்னான உரையாடல்கள்...

அகல்யா அவள் அப்பாவிடம் 'ஆம்பளன்னா யாருப்பா?', 'பயம் இல்லாத இருக்குறவன்தாம்மா' என்பதான உரையாடல்...

மறுமணம் பற்றிய அகல்யாவின் உணர்வுக்குவியல், சிவசு - அகல்யா இடையில் முகிழ்க்கும் காதல்...கதையின் தொடக்கத்தில் வரும் 'ஈலோக கோளத்தில் ஏதோ ஒரு சிராசிந்தையில்' எனத்தொடங்கும் சிவசுவின் வேண்டுதல்...

இவை அனைத்தையும் நான் 30 வருடத்திற்கு முந்தைய நினைவுப்படிமங்களிலிருந்து எழுதுகிறேன்...இந்தப்பதிவுக்காக மீண்டும் படிக்காமலேயே!

பாலகுமாரன் - அற்புதமான, பயமற்ற, உண்மையான, பெண்களை புரிந்துகொண்ட ஆண்மையான, எழுத்து வாள் வீசி தமிழ் சரித்திர கதைகளின் கோட்டையை தாறுமாறாய் தகர்த்தவர்.
 இரும்புக்குதிரைகள். மெர்குரிப்பூக்கள், பச்சை வயல் மனது, கரையோர முதலைகள், அகல்யா...என்று உச்சம் தொட்ட எழுத்தை 'பயண நேரத்தில் படித்ததும் தூக்கியெறியும்' பாக்கெட் நாவல்கள் விழுங்கித்துப்ப, மீண்டு ஆன்மீகத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார், இலக்கு நோக்கியோ இலக்கின்றியோ! 

Nicholas Spark தேடிப்படிக்கும் நம் மண்ணின் மக்கள் அறிவரா 'பழைய' பாலகுமாரனின் மேன்மையை?! தமிழை தாய்மொழியாகக்கொண்டவர்க்கு ஒரு வேண்டுகோள்; தயவு செய்து உங்கள் குழத்தைகளுக்கு தாய்மொழி கற்றுக்கொடுங்கள்; இந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட தமிழ்ப்பாடம் இன்னும் சுலபமானது. French, German...,மதிப்பெண் கூட்ட மட்டுமே உதவும், மனிதம் கூட்ட அல்ல...

இந்த ஆண்டு மிக நல்ல வாசிப்பு அனுபவம் பெற விரும்புவோர், உடையார், க.கொண்ட சோழன்கள் போன்ற பல மாடி புத்தகங்களை ஓரம் கட்டிவிட்டு அகல்யாவிலிருந்து தொடங்குங்களேன். சின்ன புத்தகம், பெரிய அனுபவம். 

அகல்யா, சிவசுவின் நட்பு கண்டிப்பாய் உங்களுக்கும் கிடைக்க எழுத்தாணிப்பூச்சியை வேண்டுகிறேன் :-)

எழுத்தாணிப்பூச்சி அறியாதோர் 'இராமபாணம்' என விக்கிபீடியாவில் தேடிப்பாருங்கள். காரணப்பெயரை சரியாக கண்டுபிடித்தவர்கள் இந்த பதிவில் பின்னூட்டமிடுங்கள் :-) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்