முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறம் செய விழை



அறம் பொருள் இன்பம்.

அன்பும் அறனும் உடைத்தாயின்...

அறவழி.

அறநெறி.

அறம்னா என்னங்க?

நீதி நேர்மை நியாயம் மட்டுமா அதையும் தாண்டியா?

அறம் செழிக்குமா? அது என்ன பயிரா?

'இந்தக்காலத்து பசங்க ரொம்ப கெட்டுப்போய்ட்டாங்க' என்பது எந்தக்காலத்திலும் சொல்லப்படும் ஒன்று.

நம் குழந்தைகள் தூரலில் நனைந்தால்கூட பொறுக்காது உடனே துண்டெடுத்து தலைதுவட்டும் நாம் அவர்கள் மனதைத்துவட்ட வேண்டாமா?

ஊடக வதை என்பது சமையல் பாத்திர நீரில் மிதக்கும் உயிருள்ள தவளை மாதிரி.  நம்மைப்பிணைக்கும் குடும்ப சங்கிலி நாம் காண்பதையும் கேட்பதையும் சங்கிலிக்கண்ணிகளுக்கு கடத்தாமல் போகுமா?

நம்மில் எத்தனை பேர் யாரும் பார்க்காதிருக்கும்போதும் தவறுகள் செய்யாமலிருக்கிறோம்?

நியாயப்படுத்தும் போர்வையில் நாம் வைக்கும் விளக்கங்கள் நம் குழந்தைகளின் வேர்களையும் பாதிப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

என்னுடன் வெளி நாட்டில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் இரவுப்பணியில் இருந்த என் மதிப்பிற்குரியவர் ஒருவர் நள்ளிரவில் என்னை 'பொருட்கள் வைப்பு' அறைக்கு அழைத்தார். 

'எதற்கு இந்நேரத்தில்?' என்றேன்.

'அம்மா நாளை நாடு திரும்புகிறார்கள். அவர்களிடம் கொடுத்தனுப்ப எழுதுபொருட்கள் கொஞ்சமாய் எடுத்து வரலாம், வருகிறாயா?'

நெஞ்சம் கடுத்தது காட்டிய என் முகத்தை கவனித்துவிட்டு தன் பேச்சை தொடர்ந்தார்; 'இவனுங்க நம்ம உழைப்புக்கு நம் வாடிக்கையாளரிடம் நிறைய பெற்று நமக்கு குறைய தருகிறார்களல்லவா, அதற்கு நம்மாலான பழிவாங்கல்'. 

அவர் கண்களில் குற்ற உணர்வு அறவே இல்லை...தனியே சென்று எழுதுபொருட்களை எடுத்துவந்தபின்னும்.

பின்னாளில் அவர் தான் வேலை செய்த பெரு நிறுவனத்திற்கு பலகோடி வருமானம் ஈட்டித்தந்ந ஒரு வாடிக்கையாள நிறுவனத்தின் கணக்குக்கு பொறுப்பாளரானார்...

அவர் செயல் தனி ஒருவரின் செயல் மட்டுமே என்றா எண்ணுகிறீர்கள்?

நம்மைப்பிரதிபலிக்கும் குழந்தைகளிடம்  நாம் காணும் தவறுகளுக்கு தீர்வு நம்மிடமிருந்தல்லவா தொடங்கவேண்டும்?

வீட்டில் கைபேசியை கழட்டிவிட என்று ஒரு மிதியடி இருந்தால் நலம். 

அதனுடன் கூடவே 'நியாயப்படுத்துதலை' கழற்றி வைக்கவும் இன்னொரு மிதியடி...

Ethics and Morals எனப்படும் அறநெறியை நமக்கு பள்ளியில் கற்றுக்கொடுத்ததை நாம் என்ன செய்தோம்? வெற்றி என்றால் என்ன என்ற புரியாத புதிரை நோக்கிய வாழ்வின் தடமற்ற ஓட்டத்தில் நம் அறச்சேமிப்பை சிறுகத்தொலைத்தோம்.

இத்தகையதொரு (ethics and morals) பாடத்திட்டமே அறியாத நம் குழந்தைகள் அறிவரா நாம் தொலைத்தது என்னவென்று?

எங்கு இழந்தோமோ அந்த இடத்தில் தேடாமல் எங்கு நம்மால் இயலுமோ அங்கு தேடி என்ன பயன்?

அறம் என்பது வாய்மை போன்றதே. யாதொருவருக்கும் தீமையிலாத செயல்...
யாதொருவரில் சகல உயிரினங்களும் அடங்கும்.

நம்மால் இயலாததை நம் சந்ததியினர் மூலம் அடைய முயலும் நம் தீரா முயற்சிக்கு வெறும் வடிகாலாய் அல்லது முற்றுப்புள்ளியாய் அவர்கள் இருக்கப்போவதை நம் செயல்களே தீர்மானிக்கின்றன. 

அறம் தேடி நம் நெடும்பயணத்தில் அவர்கள் 'அவர்களாகவே' இருந்தால் அறம் சூழும் அவர்களை, மகிழ்வுடன், நமக்கு முன்னே.

இறையாண்மையின் முதல் கன்னியான இறைக்கும் இதுவே பொருந்தும். 

*
சரி தவறென்ற விளிம்புகளின் நிழல்கூட விழாத நிலம் ஒன்று உண்டு. அந்தப்புல்வெளியில் ஆன்மா ஓய்வெடுக்கும்போது, பேசுவதற்குக்கூட இடமின்றி வார்த்தைகளால் நிரம்பி வழியும் உலகில், புதுமைச்சிந்தனைகள், மொழி, ஏன், நீ / நான் என்ற உருவகங்கள் கூட மதிப்பிழந்த அந்த வெளியில் நம்மோடு இணையக்காத்திருக்குது அறம்.

சந்திக்கத்தயாரா நாம்?


(* I twisted "Rumi" to suite my purpose :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்