முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் மெர்சல் ஆன கதை!


ஒரு சிறுவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மெர்சலுக்கு அழைத்துச்சென்றேன்...

படம் ஆரம்பித்ததில் இருந்தே willing state of disbelief க்கு என்ன முயற்சி செய்தாலும் முடியவில்லை.

ஒரு கதைநாயகன், நிஜ நாயகனாக எக்கச்சக்கமாக முயற்சி செய்திருக்கிறார், சினிமாவில்...

சீடன் குருவுக்கு வணக்கம் செலுத்த படத்தில் சில காட்சிகளை ஒதுக்கியிருந்தால் மகிழலாம், மொத்தப்படத்தையுமா அட்லீ?!

மாயாஜாலம் என்கிற கண்கட்டி வித்தையை கருவாகக்கொண்ட ஒரு படத்தில் ஒரே ஒரு 'ஆகா' விநாடியாவது (that vow moment) வருமா என்ற எதிர்பார்ப்பு நிகழவே இல்லை, க்ரிஸ்டோபர் நோலனை அட்லி அவ்வப்போது சீண்டினாலும்!

சமீபத்தில் ட்ரென்டிங்கில் இருக்கும் ஏராளமான நிகழ்வுகளுடன், எலக்ட்ரானிக் கைதட்டல்களும் விசில்களும் நிரம்பி வழிய, ஏ ஆர் ரகுமானின் 'இவன் தலைவன்!' என்கிற ரீதியிலான இசை முயற்சி...அசைக்கவில்லை.

தமிழன் உலகம் எல்லாம் ஆளப்போகிறான், வேட்டிதான் கெத்து என்று அந்நியருக்கும் அயலூருக்கும் பாடம் புகட்டுதல், மதுரை, வாடிவாசல், எம் ஜி ஆர், பாரீஸ், மேஜிக், மருத்துவ கொள்ளை என்று தளபதி இறங்கி அடிக்க முயன்றாலும் மனதில் நிற்பது ஜல்லிக்கட்டுக்காளைபோல துள்ளி வரும் மதுரைக்காரர் மட்டுமே.

U/A முத்திரை...படத்தில் வரும் வன்முறைக்காட்சிகளும் திருப்புமுனைக்காட்சிகளும் (மேலும் வன்முறை! Shock value வுக்காக) பதின்பருவத்தினரையும் கண்டிப்பாக பாதிக்கும். 

வன்முறையை நம் மீது திணிக்கும் அளவுகோலுக்கும் இத்தகைய முத்திரைகளுக்கும் தொடர்பே இல்லை...

அரசியல் உணர்வு, ஏதாவது நல்லது செய்யும் ஆவல் இவைகளையும் திரைக்கதையையும் சேர்த்துக்குழப்பாமல், தனித்தனியே நம் நாயகர்கள் எப்போது கையாள கற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. 
திரைப்படம் பல மனிதர்களின் வாழ்வாதாரம் என்பதால் கதைக்கு மட்டுமே அதில் இடம் கொடுத்து அரசியல் எண்ணங்களை ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும், நேரடியாக களமிறங்கியும் செயல்படுத்தலாமே ப்ரோ! உங்களின் முஷ்டி மடக்கல்களினாலும் பஞ்ச் வசனங்களாலும் சூடாகும் சிலர் உங்களின் வணிக கரங்களை முறுக்கினால் பாதிப்பென்னவோ சினிமா உருவாக உழைப்பவர்களுக்குமட்டுமே ப்ரோ...

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காகவும் ஈர்ப்புக்காகவும் மட்டுமே நாம் படமெடுக்கும்வரை Color of Paradise போன்ற நல்ல படங்கள் தமிழில் வர வாய்ப்பில்லை...ஜோக்கர் போன்ற படங்கள் விதிவிலக்கு...

ராகுல் காந்தியும் உங்களுக்காக களமிறங்கியிருக்கிறார் ப்ரோ. நீங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வெற்றியை அவரும் உறுதிப்படுத்துவார்!

ஆனாலும் கட்டப்பாவை 'கொன்னுட்டீங்களே' ப்ரோ!!

சிறுவன் மகிழ்ச்சியோடு திரும்பினாலும் எனக்கு படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேளையாக நோலனின் Prestige படத்திலிருந்து சில காட்சிகளை மீண்டும் பார்த்தபின்தான் மனம் அமைதியாயிற்று!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்