முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு சொல் என்ன, ஒரு எழுத்தே போதும்!

ஆயுத பூஜையும் உலக அமைதியும்.


நாமாவது வருடத்திற்கொரு முறைதான் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சில நாடுகள் என்னவோ தினம் தினம் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர்.


பாரதப்போரில் குருஷேத்திர போருக்கு முன்னால் இதே நவமி தினத்தில் தன் மக்கள் வெல்லவேண்டும் என காளியிடம் கோரிக்கை வைத்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான் அருச்சுண குமாரன் அரவான். அன்றைய இரவில் அவனது அன்னை பூமியான நாகலோகம் எங்கும் கண்ணீர்த்திவலைகள்.


இன்றைய நம் உலகில் போர்களை துவக்க தன்னைத்தானே யாரும் மாய்த்துக்கொள்வதில்லை. மாறாக, வேறு யாரையாவது பெரிய அளவில் மாய்த்தே பூஜையை துவக்குகின்றனர். பூலோகமெங்கும் கண்ணீர்த்திவலைகள் நிரம்பினாலும் இவர்களது ஆயுத 'பூஜை' நிற்காது நடக்கும்.


போர் நடந்தால்தான் ஆயுதங்கள் வெகுவாக விற்பனையாகும். ஆயுதங்கள் தகர்த்தெரிந்த பல்லாயிர கட்டிடங்களை மறுபடி அவர்களே கட்டித்தர, போர் நின்றாகவேண்டும், அமைதி நிலவ வேண்டும். எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஆயுதங்கள் கொண்டே இவர்களே எழுதுகின்றனர். பின்பு அதே ஆயுதங்களால் 'உலக அமைதி'க்கான விருது விண்ணப்பங்களையும் எழுதுகின்றனர்.


ஏகே 47 என்கிற பழுதற்ற கொலைக்கருவியை உருவாக்கிய கலாஷ்னிகோவ் என்கிற அந்த ஒற்றை மனிதனும் தன் ஆயுதம் அமைதியை 'நிலைநாட்டும்' என்கிற நம்பிக்கையினால்தான் உருவாக்கினானாம். அவனுக்கு கற்றுத்தரப்பட்டதைத்தான் அவன் நம்பினான். இன்று நாம் இந்த ஆயுதமழைகளுக்கிடையில் நித்த நித்தம் தப்பிப்பிழைக்க போராடும் நம் உலகின் வருங்கால வாரிசுகளுக்கு எதை கற்றுத்தந்துகொண்டிருக்கிறோம்??


அமைதிக்காக ஆயுதங்களை குவிப்போம் என தம் மக்களனைவருக்கும் குடிக்க  கஞ்சி கூட தர வழியில்லாத நிலப்பரப்புகளும் ஆயுதங்களை பூஜிப்பது எவ்வளவு பெரிய துயர்முரண்?


ஒருநாள் உலகம் நீதிபெறும் என்கிற நம்பிக்கையை, ஆயுத மழைகளுக்கிடையே  உணவுக்கு தட்டேந்தி அலையும் அந்த பல லட்சம் மனிதர்களிடம் சொல்ல நம் யாருக்கும் அருகதையில்லை.


ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள்.  ஆயுத மழை நித்தம் பொழிந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு நிலப்பரப்பில் நாம் பிறந்திருந்தால் இப்பதிவை எழுதும், வாசிக்கும் உரிமை கூட கிட்டாமல் மறைந்துபோயிருப்போம்...


நம் நாட்டில் நாமும் பாரத காலத்திற்கு முன்பிருந்தே ஆயுத பூஜை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். 


அன்றைய வாழ்வியல் உணவு உற்பத்தியை மையமாக கொண்டிருந்தது. உழவர்கள், உழவுக்கருவிகள் செய்பவர், உழவர்க்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் செய்பவர் என அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளின் ஆயத்த நிலையை மேம்படுத்துவதற்காக வருடத்தில் சில நாட்களை ஒதுக்கி கொண்டாடிய இந்த பூஜையின் சரியான பெயர் ஆயத்த பூஜை என்றல்லவா இருக்கவேண்டும்?


ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பார்கள், மொழியின் உக்கிரத்தை உணர்ந்தவர்கள். இங்கு ஒரு எழுத்தை நீக்கி (யு) இரு எழுத்தை சேர்த்தாலே (யத்) போதும், இந்த சொல்லின் பொருளை மாற்ற. மாற்றம் நினைவிலிருந்து தொடங்குகிறது. நினைவு, சொல்லிலிருந்து தொடங்குகிறது. சொல்லே செயலாகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்தால்... ஒரு நாள் உலகம் உறுதியாய் நீதி பெரும், அது இந்த திருநாள் தரும் சேதியாக மாறும்.


பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு:


வெகுவேகமாக நாம் அனைவரும் செய்ய வேண்டிய இன்னும் சில சொல் மாற்றங்கள்:


பூச்சி மருந்து, களைக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி என்கிற சொற்களுக்கு மாற்றாக உயிர்க்கொல்லி எனும் ஒற்றைச்சொல்.


உரம் என்பதற்கு மாற்றாக வேதிக்குப்பை எனும் சொல்.


லாபம், நஷ்டம் எனும் சொற்களுக்கு மாற்றாக கண்டுமுதல் எனும் சொல் (நம் முதலீட்டிற்கு பலனாக நாம் என்ன கண்டோம்?)


தமிழ் மொழியின் செழிப்பும் இவற்றால் மீளும்!


நம்பிக்கையில்லாதவர்கள், Luxory எனும் ஆங்கில சொல்லுக்கு மாற்றான தமிழ்ச்சொல் ஒன்றை கூறுங்கள் பார்க்கலாம்! (ஆடம்பரம் - தமிழ்ச்சொல்லுமல்ல, பொருளும் ஆங்கில பயன்பாடு அனைத்திற்கும் பொருந்தாது!). மாற்றுச்சொல் இல்லை என உணர்பவர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பு: சட்டியில் இருந்தால்தான் அகப்பையில்வரும். நம் பண்டைய தமிழ் வாழ்வியலில் Luxory வாழ்வியலே இல்லை, எனவே அதற்கான சொல்லும் இல்லை!


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. "Sharpen the saw" என்று Steven Covey சொல்லுவது... ஆயத்த பூஜை.

    பெயரில் என்ன இருக்கு என்று இப்போது உணர்கிறேன் 😃

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. புரிதல் மாறிப்போனதுதான் சிக்கல்

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...