முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாகுபலி 3.0

ஆஜானுபாகுவான ஆள். பரம சாது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே பகுதியில் வசிக்கிறார். வேலை எதுவும் இல்லை அவருக்கு. வேலை தருவதற்கு யாரும் தயாரில்லை. பசித்தால் காலாற நடந்து, கிடைத்ததை உண்டு வாழ்கிறார். அடுத்த நாளுக்கு, அடுத்த வாரத்துக்கு என சேமிக்கும் பழக்கமெல்லாம் இவரது பரம்பரைக்கே கிடையாது. இவரது போக்கு சரியில்லை என ஒரு சாரார் இவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளார்கள். 'பைசா எதுவும் தராமலே சாப்பிட்டுவிட்டு செல்கிறார்' என்பது இவர் மீது சுற்றியுள்ள மக்கள் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு. அவர்களும்கூட 'மற்றபடி ஈ, எறும்புக்கு கூட இவர் துன்பம் தந்ததில்லை' என சர்டிபிகேட் தருகிறார்கள். ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனம் தந்த தொழில்நுட்ப உதவியோடு இவரது நடமாட்டத்தை கண்காணிக்க சிலர் முடிவு செய்து இவரது கழுத்தில் கண்காணிப்பு பட்டை ஒன்றை பொருத்துவதற்கு அவருக்கு தெரியாமலே தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். பாகுபலி என்பது இவரது பெயர். விநாயகமும் சின்னத்தம்பியும் போலதான் இவர் என சிலரும், 'இல்லைங்க, இவரு வேற மாதிரி. தொந்தரவில்லாத ஆளு' என சிலரும் பேசிக்கொண்டே கண்காணிப்பு

என் பெயர் சுதந்திரம்

என் பெயர் சுதந்திரம். வயது - 50 இருக்கலாம். பிறந்த வருடம், தேதி... நினைவில்லை. எனக்கு வீடு இல்லை, உறவு இல்லை. தொழில் : இன்றைய தேதியில் இந்த நாட்டில் உன்னதமான தொழில். குப்பை பொறுக்குவது. கண்ட இடமெல்லாம் குப்பை கொட்ட கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் எனக்கு குப்பைக்கு பஞ்சமில்லை. அதிகாலை கொசுக்கடியில் / குளிரில் / புழுக்கத்தில் எழுந்து, சாலை ஓரங்களில் 'ஒதுங்கி'... எழுந்து தோளில் ஒரு பெரிய கித்தான் சாக்கோடு எனது பயணம் தொடங்கும், வயிறு வளர்க்க. சாலை ஓரங்களெங்கும் குப்பைகள் குவிந்து என்னை வரவேற்கும். பொறுமையாய் ஒரு குச்சி வைத்து அவற்றை கிளறி ப்ளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள், உலோக கழிவுகள், மரத்துண்டுகள், அபூர்வமாய் கிடைக்கும் சில விலை உயர்ந்த பொருட்கள் என நிதானமாய் தேடி எடுத்து எனது சாக்கில் நிரப்பிக்கொள்வேன். இதுவரை நான் குடிக்க தண்ணீர் பாட்டில் சுமப்இதனால்லை. உணவுக்கு என்றோ டீ காஃபிக்கென்றோ, நொறுக்குத்தீனிக்கென்றோ வேலையில் இடைவேளை எடுத்ததில்லை. இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என பருவநிலை மாற்றங்களின் ஊடாக நான் பொறுக்கியவற்றை சேர்த்து சேர்த்து ஒவ்வொரு முறை சாக்கு நிரம்பும்

உச்ச கர்ம யோகா!

ஜெய்கணேஷ் நாசர் ராமராஜன் முரளி பாண்டியன் பாக்யராஜ் பாண்டியராஜன் மோகன் பாரதிராஜா(!) ராஜசேகர் சந்திரசேகர் தேங்காய் சீனிவாசன்! என்னதான் நாம் நம் தொழிலை நேசித்தாலும் நம் விருப்பு வெறுப்புகள் நம்மையறியாமலேயே நம் செயலில் வெளிப்படும், என்னதான் 'ஞான் ப்ரோஃபஷனலாக்கும்!' என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டாலும். சில மனிதர்களோடு சில நிமிட உரையாடல்கூட சில நேரங்களில் "கடக்க இயலாத காலவெளி" போல மாறி நம்மை சோர்வடையச்செய்யலாம்.  வாழ்நாளின் பெரும்பகுதி, இப்படியான "உரையாடல்களுடனே" விழித்திருக்கும் நொடியெலாம் பயணிக்கும் ஒருவர் எத்தனை காலம்தான் இந்த சூழலில் செயல்பட இயலும், அதுவும் தன் க்ரியேடிவிடியை சற்றும் குறைத்துக்கொள்ளாமல்? நம் ஊரில் ஒருவர் இருக்கிறார்! பல மாதங்கள் பலர்கூடி தேர் இழுத்து ஒரு திரைப்படம் உருவாகிறது.  அனுபவம் மிக்க இயக்குநர்கள், கற்றுக்குட்டி இயக்குநர்கள் என யார் இயக்கினாலும், அப்படம் ஒரு முழு வடிவம் பெறுவது இசை அதனோடு சேர்ந்தபின்புதான். இப்படி, இசை சேர்வதற்கு முன்னால் ஒளி வடிவில் அறைகுறையாய் நிற்கும் படத்தை, ஒவ்வொரு படத்தையும், ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை ப