தோஷத்தில பெரிய தோஷம் சந்தோஷம்.
இந்த தோஷம் நம்மள பிடிச்சிக்கிடாதான்ற ஏக்கத்திலதான் உலக மக்கள் பெரும்பாலும் அல்லாடிகிட்டிருக்கானுங்க.
பணம், பொருள், புகழ், போதை இவை எதுவும் தர முடியாத சந்தோஷத்த ஒருத்தன் பல வருசமா தந்துகிட்டிருக்கான்னா அவன கொண்டாடணும் இல்லயா?!
"பட்டைய கெளப்புறான் மொட்டையன்!"
நமக்கு பெர்சனலா தெரியாத யாரையாவது இந்த மாதிரி நாம மாசத்தில சில தடவ, வருசத்தில பல தடவ, இப்படி உரிமையோட விமர்சிக்க முடியுமா? அதுவும் ஒவ்வொரு வாட்டியும் மாறாத சந்தோசத்தோட? உற்ற தோழனை விடவும் நம் உயிருக்கு உணர்வுக்கு இவனை நெருக்கமாக்கிய இவனது இசை தந்த உரிமை இது!
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே
மடை திறந்து தாவும் நதியென
வெள்ளிச்சலங்கைகள் கொஞ்சும் கலைமகள்
பனி விழும் மலர் வனத்தில்
பூக்கதவின் தாழ் திறந்து
இளமை எனும் பூங்காற்றை தித்திக்க வைத்து
ஏதோவொரு மோகத்தை உண்டாக்கி
இசையாய் மலருகையில்
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் ஆயிரம் தாமரை மொட்டுக்களை ஆனந்தக்கும்மியோடு நம் மனதில் ஆட வைத்து சந்தனக்காற்றில் இசையோடு பேசும் எந்தப்பருவத்திலும் புதிய ராகத்தில் நனைத்து நம்மை விட்டு வேறெங்கும் செல்லாது சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போனாலும் கவலைகளின்றி இந்த புத்தம்புதுக்காலையில் செவியில் விழுந்து மனதில் நுழைந்து நம்முள்ளே நம்முள்ளே உயிரில் கலந்த உறவாய் ஆகிப்போய் இப்போது தென்றல் வந்து தீண்டும் போது என்ன இன்பமோ மனதிலே...
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் இவனது கீதம் கேட்கும் எவனையும் இனிமை இதோ இதோ என நொடிப்பொழுதில் வாழ்வின் இன்னல்களை மறக்கவைத்து ராக்கம்மாவாக மாற்றி கையைத்தட்டவைக்கும் சுகமான ராகம், ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றும் இவனது இசைக்கோவைகள் அதன் பின்னான மௌனமான நேரத்திலும் தொடருமே...
போர்க்களத்தில் நிற்பவன் மனதிலும் நினைத்த நொடியில் அந்தி மழையாய் கொட்டுமே!
"
நீ போட்ட மெட்டுக்கொரு நன்றி
நமைச்சேர்த்த இசைக்கொவைக்கொரு நன்றி
அயராத செவிகள் சொல்லும் நன்றி நன்றி...
"
இளைய நிலா பொழிகையிலே மன்றம் வந்த தென்றலைக்கூட மஞ்சத்துக்கு வரவழைத்து... கேக்கிறவன் மனசை எல்லாம் காட்டுக்குயிலு மனசா மாத்தி பாட்டுக்கொன்னும் பஞ்சமில்லாத... பட்டைய கெளப்பறான் கெளப்பறான் கெளப்பிகிட்டே இருக்கான் இந்த மொட்டையன்!
இந்த இசை ஞானியை சொந்தம் கொண்டாடுவோர் பலர்! அவருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. மறைந்த பாடும் நிலா கூட இவருடைய நெருங்கிய சொந்தம் தான். ஆனாலும் இசையில் உச்சம் தொட்டு மேலும் தொட உச்சங்களை தேடும் இவருடன் பிணக்குற்றிருந்தார் தனது கடைசி காலத்தில். காரணம் முன்னவர் பலரும் கோராத காப்புரிமையை இவர் கோரிய விதம்தான்.
பதிலளிநீக்குஇசை மெட்டு இவருக்கு கை வந்தது;அதற்கு உருவம் தந்த கவிஞர், உருகி உருகிப்பாடி உலாவ விட்ட வித்தகர் ஆகியோருடனான பங்களிப்பு அதை இசைக்கோலமாக்கி இசை இலக்கணம் அறியாத குழந்தையை தாளமிட வைத்தது, ஆட வைத்தது, கிறங்க வைத்தது, உறங்க வைத்தது. இது ஒருகூட்டு முயற்சியாக கொள்ளப்பட்டது.
புதிதாக உரிமை கோரும் போது அதை நாடறியச் செய்தால் மட்டும் போதாது:தனது தனி உரிமை என்பதை நிலை நாட்ட இசையால் கவரப்பட்டு எழுத்தறிவில்லாதவரும் அதனை நகலெடுப்பதை உணர்ந்து மனிதாபிமானத்துடன் நகர்ந்திருக்க வேண்டும். என்னிடம் கேட்டிருந்தால் இலவசமாக கொடுத்திருப்பேன் என்று உரக்க கூறியிருக்க வேண்டும். முரண்டு பிடிப்பவர்களுக்கு அவரது தனி உரிமை புரியும் வரை, பல லட்சங்களை இழந்தாலும் கூட, காலம் அனுமதித்திருக்கலாம்.
நானும் ஒரு சொந்தம் என்ற முறையிலேயே இந்த உரிமையை எடுத்துக் கொள்கிறேன் - உணர வைக்க எவ்வளவு முயன்றார், மனிதாபிமானத்தினால் எவ்வளவு இழந்தார் என்று அறியாத நிலையிலும்.