முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடி 4.0


ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில்...

(ஆரியக்கூத்து - ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்து இடுவோர், பறை கொட்ட கயிற்றின்மீது நின்று அழகிய நடனம் ஆடு்வது என குறுந்தொகையில் பெரும்பதுமனார் பதிந்துள்ளார்)

ஆட்சிக்கு வந்தபோது கட்சி சார்பற்ற இந்தியனாக மிக மகிழ்ந்தேன். நல்ல மாற்றங்கள் நிறைய வருமென பழைய கனவை (1998 இல் இந்தியா அணு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியபோது கண்ட கனவை) மீண்டும் காணத்தொடங்கினேன்.

முதல் இரண்டு ஆண்டுகள், செயல் வேகம் கண்டு பிரம்மித்தேன். 

மேக் இன் இந்தியா - நல்லதென்று நம்பினேன்.

டிமான்... நல்லதென்று நம்பினேன். 

இன்னும் பல அறிவிப்புகளையும் அவ்விதமே.

சொதப்பலான அமலாக்கங்கள், பேச்சு பேச்சாக மட்டுமே நின்ற பல முழக்கங்கள், மெல்ல தலைதூக்கும் மத வெறுப்புகள், அதனாலான இழப்புகள், தமிழகத்தில் மத்திய ஆதரவோடு நடக்கும் சந்தர்ப்பவாத அரசியல், நாடளவில் சுதந்திர நிறுவனங்களின் செயல்பாடுகளில் குறுக்கீடு, இப்போது ராமர் கோவில் கட்ட அவரது கட்சியின் மூல அமைப்புகளின் அழுத்தம்...

ஏ டி எம் இல் ரீ காலிபரேஷன் இல்லாமல் புதிய நோட்டுக்கள் வந்திருந்தால் பொதுமக்களின் துன்பத்தில் பாதியாவது குறைந்திருக்கும். அரசுக்கு செலவும் குறைந்திருக்கும்.

அமெரிக்க அதிபர் போன்று அதிரடியாக வருமான வரி சுமை / சலுகை மூலமாக மேக் இன் இந்தியாவை நனவாக்கியிருக்கலாம்...

உலக வங்கி ப்ளஸ் பல வளர்ந்த நாடுகள் நமது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கடன் தந்தும் பற்றாத சூழலில் வானுயர்ந்த சிலைகள்...

கோடி கோடியாய் ஊழல் நடப்பதாய் ஏராளமான ஆவணங்கள் வெளிவந்தும், பிடிபட்டும் தமிழகத்தில் இன்னும் ஒரு அமைச்சர் கூட சிக்கவில்லை...

வலுவான எதிர் ஆளுமை என எவரும் இல்லாத சூழலில், உடனடித்தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. விவசாயிகள் திரள் திரளாய் தில்லி சென்றும் பயனில்லை. மரபணு மாற்றப்பட்ட பருத்தியினால் லட்சக்கணக்கில் வாழ்வாதாரம் அழிந்தபின்னரும் மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் அனுமதித்தது இதில் மிக கொடுமையான நிகழ்வு. 

எனது நட்பு வட்டத்தில் வேளாண்மை, வணிகம், தொழிற்சாலைகள் நடத்துவோர், கல்வியாளர்கள், ஊதியத்துக்கு உழைப்பவர்கள், ஓய்வூதியத்தில் வாழ்பவர்கள் என யாருமே மகிழ்வாயில்லை.

எதனால் இப்படி ஆனது என, சுய விருப்பு வெறுப்புகளை, கண்மூடித்தனமான ஆதரவு எதிர்ப்புகளை ஒதுக்கி வைத்து அலசினால் மட்டுமே, நிகழ்நிலையிலிருந்து விரும்பிய நிலைக்கு நாட்டை எப்படி நகர்த்துவது என தெளிவு கிடைக்கும். (இந்தியாவில் இன்டெலிஜென்சுக்கு என்றுமே குறைவில்லை.)

அவற்றை நனவாக்க, இன்னும் கடினமான முடிவுகள் எடுக்க நேர்ந்தாலும் செய்யவேண்டும்.

130 கோடி மக்களுக்குமான செயல்திட்டங்கள் எவர் செய்தாலும் (அறிவித்தால் போதாது) அவருக்கு நாம் வாக்களிக்கவேண்டும். அது மோடியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.

குறிப்பாக, நமது தொகுதிக்கு நல்லது செய்பவர் எந்தக்கட்சியானாலும் நாம் வாக்களிக்கவேண்டும். இது மட்டுமே நம்மிடமுள்ள துருப்புச்சீட்டு. ஆனால் இவரது செயல்பாடு பிடிக்கவில்லையென மோசமான இன்னொருவருக்கு வாக்களிக்கவேண்டிய நிலைமை நிறைய குடிமகன்களுக்கு. நோட்டா ஏட்டுச்சுரைக்காய், கறிக்குதவாது.

கருத்துகள்

  1. It is not enough if a candidate is good and capable unless the party that he represents is also good and capable. It is the ruling party that could make or mar. When will we have such a party or at least legislators with that desire ready to switch over with like minded friends to such a party as a faction i.e., without getting disqualified and without yearning to earn in the process.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்