காற்றைத்துரத்தி மேகத்தை
கடல் தள்ளி
(சூரியக்)கதிரை ஏவி
கடல் ஈரத்தை
மேகத்தில் ஏற்றி
புவியோட்டில் இரையும்
பசித்த வயிறனைத்திற்கும்
சில துளியேனும்
பெய்யெனப்பெய்ய
பெருமழையை இறக்கி
வேடிக்கை பார்க்குது
மழைக்கு ஒதுங்கிய
கார்கால வானம்.
அமுதுண்ட மகிழ்வில்
வெடித்துக்கிளம்பும் நன்றி
பூவாய் காயாய்
பறவையாய் மிருகமாய்
இன்னும் என்னவெல்லாமோவாய்
புவியின் பெருநிலமெங்கும்.
நன்றி கண்டு
கனிந்து சிவந்த
மழைவானின் மகிழ்ச்சி
இங்கு கவிதையாய்!
Superbly simple. Simply superb
பதிலளிநீக்கு