வண்ணப்பூச்சியின் இறகிலிருந்து உதிரும் வண்ணமெல்லாம் எனக்கே எனக்காய்.
வழித்தெடுத்து அப்பிக்கொண்டு என்ன முயன்றும் பறக்கமுடியவில்லை.
சின்ன வயதில் பெரிய கனவு எனக்கு இறகு முளைத்து பறப்பதாய். இன்றும்கூட என்றாவது கனவில் பறப்பது நிகழ்ந்தவண்ணமே.
வானிலிருந்து வண்ண வண்ணமாய் புவிப்பரப்பை பறவைப்பார்வையில் கண்டு மகிழ்வது கனவில் மட்டுமே சாத்தியப்படுகிறது...
(இயற்கையில்) மாயத்தூரிகைகள் ஏராளம், வண்ணந்தாங்கி பறக்கும் உயிர்களும் ஏராளம்.
என்றாவது ஒரு நாள் என் இறகிலும் பறத்தலுக்கு ஏதுவான வண்ணத்தை எனக்கான தூரிகையொன்று தடவலாம்.
அது நிகழ்ந்தபின் உங்களை கடந்துபோகும் வண்ணப்பூச்சிகளில் நானும் இருக்கலாம்.
அதுவரை கவிதை எழுதுவதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை...
கருத்துகள்
கருத்துரையிடுக