முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசு! குரங்கு!!


கும்பகோணத்தில் பல கட்டு வீடு, ரயில் மாதிரி. வாசலில் நுழைந்து கொல்லை சுவர் தொட சில மணி நேரம் ஆகும் :-)

ஏராளமான குரங்குகள், குட்டி முதல் மந்தி வரை. இஷ்டத்துக்கு நுழைந்து, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடும். பின்கட்டு ஓட்டுக்கூரையில் அமர்ந்து உடைத்து உண்ண முயலும். உடைவது எதுவாக இருந்தாலும் கீழே கடப்பவர்மேல் அபிஷேகம்!

அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒத்தாசை செய்யும் அடுத்த வீட்டுப்பெண் ஏதோ வேலையாக சொல்லிக்கொண்டு நகர, சற்று நேரத்தில் அவர் வந்துவிட்டதாய் உணர்ந்து கதை பேசிக்கொண்டே அம்மா மாவரைக்க, மாவில் கை துழாவிக்கொண்டிருந்தது அம்மா உயரமுள்ள மந்தி ஒன்று!

பள்ளியிலிருந்து திரும்பி வீடு நுழைந்த சிறார்கள் நாங்கள், அலறிய அலறலில் மந்தி பதறி ஓட, அம்மாவுக்கு அப்பதான் தெரியும்! ஆனால் இந்தப்பதிவு அவர் பற்றி அல்ல. வாசு பற்றியது.

வாசு, என் பால்ய நண்பன், அடுத்த வீடு. விடுமுறை நாளில் நாங்கள் டவுசர் பாண்டிகள் கூடி எங்கள் வீட்டு மாடியில் வாழைப்பழங்கள் தின்றவண்ணம் நூற்றுக்குச்சி விளையாடுகையில் ஜன்னல் வழியே குதித்தது அதே மந்தி!

நாங்கள் அலறிய அலறலில் மொத்த தெருவும் பதறி ஓடிவர, சுவற்றில் தொற்றியபடி சில டவுசர்கள், கதவிடுக்கில் சில டவுசர்கள், மாடிப்படியில் பயத்தில் உருண்ட சில டவுசர்கள் என கணக்கெடுத்தால் ஒரு டவுசர காணோம்!

'ஐயையோ, வாசுவ காணமே, எங்க போனான்?' என பலர் தேட, 'மந்தி தூக்கிட்டு போய்ருக்குமோ' ன்னு இன்னொருத்தர் பிறாண்ட, பல நிமிடத்தேடலுக்குப்பின் ஒரு பொடியன் கத்தினான், 'நான் கண்டுபிடிச்சிட்டேன்!'.

அவன் சுட்டிக்காட்டிய இடத்தில், கட்டிலுக்குக்கீழ், ஒரு பாய்க்குள் தலை முதல் கால்வரை உடலை சுற்றிக்கொண்டு, வாசு, வாழைப்பழம் தின்றவண்ணம்!!!!

"கல்லுளிமங்கன்! கொஞ்சங்கூட பயமே இல்லையாடா?!!!!!" என காரியத்தில் கண்ணாயிருந்தவன் இன்றுவரை அப்படியே :-)

இந்த நிகழ்வு இன்றுவரையி்ல் அவன் வெட்கப்படும், ரசித்து சிரிக்கும் ஒரு மொமெண்ட்டாக ஆகப்போவது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்