காயத்தில் ஈரம் உள்ளவரை
காயாது காயம்.
(காயம் = உடல்).
ஈரம் வளர்த்த காயம், வளர்ந்தபின்
ஈரம் வளர்த்தால் வாழ்வு செழிக்கும்.
ஒன்பது துளையிருந்தும் காயமின்றி
காயம் காக்கும் ஈரமனம்...
அதை ஈரமாக்குவது எதுவோ
அதுவே (காயத்துள்) அடைந்ததையும் காக்கும்.
இதுவே பேரன்பின் பேரற்புதம்.
புவியோட்டில் ஒற்றைத்துளை இட்டு
ஒரு விதை விதைத்து
அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்குருவி!
இதுபோல ஆயிரம் விதை
விதைக்க ஈரமனதில் இடமுண்டு.
இந்தக்கவிதை ஆயிரத்தில் ஒன்று!
கருத்துகள்
கருத்துரையிடுக