முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித...


தடுப்பு சுவர் தாண்டி வளையல் கரம் ஒன்று. சுதாரிப்பதற்குள் நறுக்கென்று உச்சந்தலையில் கொட்டு! 'அம்மாடியோவ்! என்ற அலறலோடு வாயில் இருந்த பாதி சப்பிய புளிப்பு முட்டாய் பறக்க, வலியில உசிரு போயி வந்தது.

"கௌன்டர் அட்டாக்! நௌ!" என முழக்கமிட்டு நாங்கள் மூவர், அரை டவுசரை இறுக்கிப்பிடித்தபடி வகுப்பிலிருந்து வெளியேறியபோதுகூட கேங் வாரின் உக்கிரத்தை அந்த நடுநிலைப்பள்ளி உணரவில்லை.

Search Squad, செக்சன் செக்சனாய் தேடினோம். எல்லா செக்சனிலும் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. Usual Suspects எல்லாம் ரெட்ட ஜடை குனிஞ்ச தல நிமிராம எளுதிகிட்டு...

"இது சாதாரண கொட்டு இல்ல; நாடி நரம்பெல்லாம் சண்டை வெறி புடிச்ச ஒரு பொண்ணோட கொட்டு" என கொய்யாப்பழ சைஸ் காயத்தை நான் தேய்க்க, 
'கண்டிப்பா புளிப்பு முட்டாய்க்கோ வெள்ளரிப்பத்தைக்கோ ஆசைப்பட்ட ஒரு கூலிப்படை ஆளு செஞ்ச வேலையாதான் இருக்கும்!' என உறுதியாய் சொன்னான் சிங்காரவேல். என் டிகிரி தோஸ்த். அவனுக்கும் அடுத்த க்ளாசில் ஒரு வாயாடிக்கும் நிகழ்ந்த சண்டை சில நாட்களிலேயே Gang War ஆக வலுப்பெற, கொலாட்டரல் டேமேஜ் 'நங்'கென்று என் தலையில்.

எதிர் கேங் கடைசிவரையில் 'தெரியாது' என்று சாதித்ததாலும், கயவனையும் புனிதனாக்கும் புன்சிரிப்பு கொண்ட சாவித்திரி டீச்சரின் கனிவான மத்தியஸ்தாலும் கேங் வார் அன்றே முடிவுக்கு வர, அன்று மாலையே கேங் ப்ளஸ் எதிர் கேங் வெள்ளரிப்பத்தை கடித்தவண்ணம் ஒன்றாகவே நடந்து கலைந்தோம்.

மன்னார்குடி ராஜகோபுரத்தில் முதல் தளம் வரை குரங்கு மாதிரி தொத்தி ஏறுவோம். அங்குதான் சிங்காரவேல் எனக்கு ஒரு அற்புத செடியை அறிமுகப்படுத்தினான். ஒரு வகை புல் அது. பறித்து விரல்களால் அடிப்பகுதியை பிடித்துக்கொண்டால் நுனிப்பகுதி வட்டமடிக்கும், மெய்யாலுமே!
இன்று அந்த கோபுரத்தின் பழைய அடையாளங்கள் எதுவும் இல்லை. சிங்காரவேல் இன்றும்கூட அந்த மந்திரப்புல் மாதிரி உலகின் எந்த மூலையிலோ வட்டமடித்துக்கொண்டிருப்பான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்