முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெவ்யூ: ஐ.எம்.ஒ சர்கார் ஒரு...


கார்ப்பரேட் கிரிமினலுக்கும் பொலிடிகல் கிரிமினல்சுக்கும் நடக்கும் போரில், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், பேசுகிறார்கள், அடிக்கிறார்கள், ரத்தம் தெறிக்க தெறிக்க.

ஜல்லிக்கட்டு, மாணவன்டா, மீனவன்டா, கந்துவட்டி, சென்னை வெள்ளம் என புல்லாங்குழலின் ஓட்டைகளை நிரப்பி, தேவைக்கேற்ப திறந்து மூடி வாசித்தாலும் கதையில் சீவனில்லை. ஆடி காரின் மீது போலிரோ ஒன்று டைவ் அடித்து தாண்டி செல்கையில் விஷால் கூட விசிலடிக்க மறந்து வேடிக்கை பார்த்திருப்பார்!

ஒரு காட்சியில் டிசைனர் சூட்டில் கா. கிரிமினல், பொ.கிரிமினல் ஒருத்தரை அலேக்காக தூக்கி, தலைகீழாக, நெட்டுகுத்தாக்கி, அவரது தலையை தரையில் கடப்பாறை குத்து, சில குத்துக்கள், குத்தி சாய்க்கிறார், நம்மையும் சேர்த்தே...

நீ கார்பரேட் கிரிமினல், நான் கருவிலயே கிரிமினல் (கானாவுக்கு கானா, பஞ்ச் ப்ரம்மாதம்!) என இறங்கிக்கொண்டே போகும் வசனங்கள்... ஜெயமோகனா இது?!

மகா நதியை ஒரு குடத்தில் அடைத்தாலாவது தாங்கிக்கொள்ளலாம்; வெற்றிலை சாறு துப்பும் பாத்திரம் ரேஞ்சுக்கு... பணம் / புகழ் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அந்தப்பொண்ணுக்கு யாராவது அறிவுரை சொல்வார்களா?

விஜய், சர்காருக்கு உயிர் கொடுக்க கடுமையாய் உழைத்திருக்கிறார். லட்சக்கணக்கில் ரசிகர்களுக்கு சிகரெட்டு, சாராயம் இல்லாமலே கிக் கிடைக்கும், பின் ஏன் ப்ரோ??

49 P பற்றி விழிப்புரை தந்த கதையில் இறுதியில் ஒரு அருமையான கேள்வி, முருகதாஸ் கேட்கத்தவறிவிட்டார். 210 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் ஜெயித்தால், அறுதிப்பெரும்பான்மை அரசு அமைப்பது எப்படி? அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?

ஒருவேளை... சர்கார் -2? ஐயகோ!!!!!

(ஐ.எம்.ஒ என்று ஒரு பாடல் துவங்குகிறது. In My Opinion என்பதன் ஆங்கில சுருக்கத்தின் (IMO) தமிழ் வடிவாம். ஐயகோ!)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்