முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதனுக்கு மதம் பிடித்த கதை!


மனிதனுக்கு மதம் பிடித்த கதை!

மதங்களின் அடிப்படை என்ன? தேவை என்ன? என்பவை பற்றிய பதிவு. 

முழுதாய் படிக்கவும் :-)

உணர்வதே அறிவு!
உணர்வின் குவியல் உடல்.
உயிர் காக்க, நீட்டிக்க உள்ளே பொதிந்திருக்கும் பொறிகள் ஏராளம். பொதித்தது யார்? தெரியாது!

பசியென்று ஒரு பொறி.
துயில் என்று ஒரு பொறி.
துயின்றது (தூங்கியது) போதும் என்று ஒரு பொறி.

தாகமென்று ஒரு பொறி.
காமமென்று, கோபமென்று, பயமென்று, பாவமென்று... ஒவ்வொரு பொறியும் நம் உயிர் காக்கும் / நீட்டிக்கும் பொறிகள்...

இப்பொறிகளின் கருவிகளாய் ஐம்புலன்கள். புலன்களின் வழி இயங்கும் இவற்றிற்கு அறிவு தேவையில்லை. சொல்லப்போனால் அறிவே இவற்றின் முதல் எதிரி, பெரும் எதிரி!



உணர்வின் வழியே பயணம் செய்யும் உயிர்கள் ஒரு பெருங்கானகமளவு என்று கொண்டால், அறிவென்பது ஒரு சிறு பொறி,  அக்கினிக்குஞ்சு...

உணர்வினால் கட்டி எழுப்பப்பட்ட பெருங்காடுகளும் வெந்து தணிய, நமக்கு நாமே பொந்திடை வைத்துக்கொண்ட அக்கினிக்குஞ்சு நம் அறிவு.

பசித்தால் உண்பது உணர்வு, நேரத்துக்கு உண்பது அறிவு. 

தாகத்திற்கு நீர் அருந்துதல் உணர்வு. நல்லிரவில் தாகமெடுத்தால் தூக்கம் கலையுமென தூங்கும் முன் அருந்துவது அறிவு.

இப்படி ஒவ்வொரு பொறியாய் அறிவு தகர்க்க, மரண பயத்தில் உடல் நடுங்கவும் அறிவு சொல்லும் ஆறுதல் என்ன தெரியுமா?

"உணர்வென்பது மாயை! என்னை நம்புவோர்க்கு மட்டுமே மரணமற்ற பெரு வாழ்வு கிட்டும். வா பயணிக்கலாம்"



அந்த நிலை, மரணமற்ற பெருநிலை, நாளையே சாத்தியப்படாது. நெடுங்காலம் அதற்காக அறிவு உழைக்க வேண்டும். அதுவரையில் தற்காலிக ஆறுதலாய் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் நகரம் என்றும்!

"சொர்க்கப்பாதையை நரகப்பாதையிலிலிருந்து எப்படி வேற்றுமைப்படுத்துவது?" என்று அறிவு கேட்டது.

'நன்மை செய்தால் சொர்க்கம். தீமை செய்தால் நரகம்', அறிவு சொன்னது; நரகப்பாதையை நகரங்கள் வழியே அமைத்தது.

"நன்மை என்றால்?", அறிவு கேட்டது.

'அவரவர் விருப்பம்!', அறிவு பதிலளித்தது,
நன்மைக்கும் தீமைக்கும் எல்லைகள் வகுத்தது; 'ஊருக்குள் கொன்றால் கொலை; எல்லையில் கொன்றால் பரிசு' என்பதாய். பரிசும் உறுதியல்ல; அது யாரைக்கொல்கிறோம் என்பதைப்பொறுத்து!

" அது சரி. சொர்க்கம் நரகம் யார் செய்தது?" என அறிவு கேட்டது.

'இறை விளையாடல்!' என அறிவு சொன்னது.

"இறையென்றால்?" அறிவு கேட்டது.

'நமை மீறிய சக்தி! கவலை வேண்டாம். இறையின் எல்லைகளை நாம் அறிவின் மூலம் சுருக்கிக்கொண்டே வருகிறோம்; மரணம் மட்டுமே இப்பொழுது இறையின் பிடியில்!' என்று அறிவு நகைத்தது...

அன்பைப்போதிக்கும் மதங்களனைத்திற்கும் மையம் இறை vs அழிவின் ஆற்றல்.

உணர்வுக்கும் அறிவுக்கும் நடக்கும் பெரும்போரில் எது இறை? எது அழிவின் ஆற்றல்? 

விடை தெரியாது விழிக்கும் நம் கூட்டத்தின் மீதுதான் இவ்விரண்டும் பகடை உருட்டி போரிடுகின்றன. 

உருளும் பகடைகளில் வெட்டுண்டு வீழ்வது அனைத்தும் நாமே, நாமன்றி வேறில்லை!



உணர்வே வாழ்வென்றால் மதங்கள் தேவையற்றுப்போய்விடும் (என் கடவுள் பெரிதா உன் கடவுள் பெரிதா? என்பதே அறிவின் செயல்தானே. உணர்வு, இரண்டையும் வணங்கும், அவ்வளவே!).

நாம் அப்படி ஆகவிட்டுவிடுவோமா என்ன?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்