"கத்துக்குட்டி காதல், கன்றுக்குட்டி காதல்.
தற்காலிக பிரிவு, கட்டாயப்பிரிவு, காதலனைக்காணாமலே பிரிய வேண்டிய துயரம்...
அலைகடலின் கரையில் தளும்புது ஒருத்தியின் மனசு.
அவள் உயிர் உருகும் சத்தம் அவனுக்கு மட்டும் கண்டிப்பாய் கேட்குமென்று நம்புகிறாள். அவன் கேட்காமலே தந்த தனது உயிரை திருப்பித்தர வேண்டுகிறாள்...
கன்னிக்காதலின் முதல் முத்தம், அவன் என்று கொடுத்தாலும் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று மருகுகிறாள்.
இதான்யா சிச்சுவேசன்! ராசா, வைரம், டூ வாட் யூ கேன். அடுத்த ட்வென்டி இயர்சுக்கு இதான் Anthem ஆ இருக்கணும். Yes!"
பாரதிராஜா இப்படி நேரேட் பண்ணாரான்னு தெரியாது. ஆனா, இன்னைக்கு இந்த பாட்ட கேட்டாலும் இதயம் சில பீட்ச ஸ்கிப் பண்ணுதே! என் இனிய தமிழ் மக்களே! விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த இப்பாடல் நம் மனக்கண்ணில் நிறுத்தும் முகம் கண்டிப்பாய் மகிழ்வு தரும்!
#onemoresong
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்
நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கி போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்
#onemoresong
கருத்துகள்
கருத்துரையிடுக