முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர் உருகுதே என் இனிய தமிழ் மக்களே!


"கத்துக்குட்டி காதல், கன்றுக்குட்டி காதல்.

தற்காலிக பிரிவு, கட்டாயப்பிரிவு, காதலனைக்காணாமலே பிரிய வேண்டிய துயரம்...

அலைகடலின் கரையில் தளும்புது ஒருத்தியின் மனசு.

அவள் உயிர் உருகும் சத்தம் அவனுக்கு மட்டும் கண்டிப்பாய் கேட்குமென்று நம்புகிறாள். அவன் கேட்காமலே தந்த தனது உயிரை திருப்பித்தர வேண்டுகிறாள்...

கன்னிக்காதலின் முதல் முத்தம், அவன் என்று கொடுத்தாலும் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று மருகுகிறாள்.

இதான்யா சிச்சுவேசன்! ராசா, வைரம், டூ வாட் யூ கேன். அடுத்த ட்வென்டி இயர்சுக்கு இதான் Anthem ஆ இருக்கணும். Yes!"

பாரதிராஜா இப்படி நேரேட் பண்ணாரான்னு தெரியாது. ஆனா, இன்னைக்கு இந்த பாட்ட கேட்டாலும் இதயம் சில பீட்ச ஸ்கிப் பண்ணுதே! என் இனிய தமிழ் மக்களே! விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த இப்பாடல் நம் மனக்கண்ணில் நிறுத்தும் முகம் கண்டிப்பாய் மகிழ்வு தரும்!

#onemoresong

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்
நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கி போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

#onemoresong

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...