முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்றைய ஸ்பெஷல் - கரடி பர்கர்!



இன்றைய ஸ்பெஷல்: கரடி பர்கர்!

'அம்மா, காடு பாக்கணும்மா. அப்பா காடு பாக்கணும்ப்பா'.

"ஏம்மா, எதுக்கு உனக்கு காடு பாக்கணும்?!"

'அங்க சிங்கம், புலி, கரடி எல்லாம் இருக்காம்ப்பா. எனக்கு பாக்க ஆசையா இருக்கு'.

"ஓ அதனாலயா! ஜோரா போலாம். ஆனா அது பயங்கரமான இடம். அசந்தா மிருகங்கள் நம்மை சாப்பிட்டுடும்!!! பாதுகாப்பான இடம் ஒன்னு நம்ம நகரத்திலயே இருக்கு. அதுக்கு zoo ன்னு பேரு. அங்கே போலாமா?"

"!! Zoo ம் காடாப்பா? அங்க மிருகங்கள் இருக்காப்பா! எப்படி அதெல்லாம் வந்தது?'

"இருக்கு... ஆனா தானா வராதும்மா. கொஞ்சம் பேர் காட்டுக்குள்ள போய் புடிச்சிட்டு வந்து இங்க காடு மாதிரி செட் பண்ணி உள்ளே விட்டுடுவாங்க".

'அந்த மிருகங்களுக்கெல்லாம் சாப்பாடுப்பா?'

"அது... வேளா வேளைக்கு குடுத்திடுவாங்கம்மா"

'அதுங்கல்லாம் zoo விலருந்து தப்பிச்சிட்டா?'

"அப்படியெல்லாம் ஆகாதும்மா. மனுஷங்க நாம ரொம்ப பவர்ஃபுல். தப்பிக்க விடமாட்டோம்... எப்போ போகலாம்னு சொல்லும்மா"

வீட்டு வாசலில் வந்து விழுந்த செய்தித்தாளை அப்பா  எடுத்து வருகிறார். அதில் கடைசி பக்கத்தில் ஒரு சிறிய பெட்டிச்செய்தி:
'
03.06.2018
பெர்லின் நகரில் கன மழை, கடும் வெள்ளம். ஊர் மத்தியில் உள்ள zoo வில் ஒரு சிங்கம், ஒரு புலி ஒரு கருஞ்சிறுத்தை, ஒரு கரடி காணவில்லை எனவும், அவை தப்பியிருக்கலாம் என்ற பயத்தில் ஊர் மக்களை வீட்டை உள்ளிருந்தே பூட்டிக்கொண்டு பத்திரமாக, எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் வெள்ள நீர் வடிந்ததும் zoo வுக்குள்ளேயே சகதியில் சிக்கியிருந்த புலி, சிங்கம், கருஞ்சிறுத்தை மீட்கப்பட்டன. தப்பிச்சென்ற கரடி மட்டும் சில மணி நேரத்தேடலுக்குப்பின் zoo விற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டது. இதுபோல சில ஆண்டுகள் முன்னர் வெள்ளத்தில் தப்பிச்சென்ற சிங்கம் ஒன்றும் சுட்டுக்கொல்லப்பட்டது நாம் அறிந்ததே.
'

இது இன்றைய செய்தி, உண்மையில் பெர்லின் நகரில் நேற்று நடந்தது!

சுதந்திரமான காட்டு விலங்குகளை விலங்கிட்டு கூண்டிலடைத்து 'பாதுகாப்பாய்' நகருள் நாம் பார்ப்பதற்காக உலவ விட்டு, தப்பிச்செல்தல் என்றால் என்ன என்று கூட சிந்திக்க இயலாத இவ்வுயிர்கள் இயற்கைப்பேரிடரில் 'தப்பித்தவறி' வெளியேறினால் 'நமனை அஞ்சோம்' என அதுவரை இறுமாந்திருந்த நாம் அஸ்தியில் ஜன்னி கண்டு உடனே படை சேர்த்து நகருள் வேட்டையாடி கொன்று குவித்து, 'அப்பாடா, ஆபத்து நீங்கியது' என மகிழ்வது... என்ன பிறவி இது?

இன்று மாலை பெர்லின் நகரில் ஆபத்து நீங்கிய நிம்மதியில் ஏதாவதொரு உணவகத்தில் சிலர் கரடி பர்கர் சுவைத்தவண்ணம் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கலாம்...

'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்களை அறியாத கரடி சுற்றமும் நட்பும், இறந்தவர் எங்கோ தொலைவில் மலைக்காட்டில் தேன் வேட்டையாடிக்கொண்டிருப்பதாய் கரடிக்குழந்தைகளுக்கு காட்டு மரக்கிளையில் நிலவொளியில் கதை சொல்லி தூங்கச்செய்துகொண்டிருக்கலாம்... 

அந்த கரடிக்குழந்தைகளின் தலை வருடிக்கொடுக்க என்னோடு யார் வந்தாலும் மகிழ்வேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்