நினைவுக்குமிழ்கள்... நிஜ நீர்க்குமிழ்கள் போலவே... அடிமட்டத்திலிருந்து எப்போதாவது குபுக்கென மேலெழுந்து எங்காவது வெளிப்படும். அதுவாய் மெல்லக்கரைந்து உடையும், இன்னொன்று முளைக்கும்... இந்த இரவில் சற்று நேரம் முன் பாலு ஒரு இசை மேடையில் ஓ ப்ரியா ப்ரியா மீ ப்ரியா ப்ரியா என தெலுங்கில் உருக, பாடகி ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா எனத்தொடர, இருமொழிப்பாடல்... இசையின் மென்சிறகுகளை இறுகப்பற்றி, பாடல் முடிந்தபின்னும் இறங்க மனமின்றி மனம் தளும்ப, அந்த தளும்பளில் இருந்து உருளத்தொடங்கின என் குமிழ்கள் ஒவ்வொன்றாய்... குன்னூரில் நாயகனின் குளிர் வீட்டுக்கதவு திறக்கையில் கீழ் இடைவெளியில் கசிந்து உள் பரவும் பனி... ஓ பாப்பா லாலி என காதலியை தொடையில் தாங்கி தாலாட்டுப்பாடும் மனோ... மலை மார்க்கெட்டில் கையில் கேரட் கொத்தோடு பாட்டியின் பார்வையிலிருந்து நழுவியோடும் நாயகி... இறுதியாண்டு மருத்துவ மாணவியின் முகத்தில் பொட்டு வைத்த வட்ட நிலவாய் அரையிருளில் ஓடும் காதல் கலந்த ரசனை... நரைமுடியில் கோர்த்த மணிகளை பெருங்காதலோடு தடவும் வாத்துக்காரியின் விரல்கள்... நிலவொளியில் கடற்கரையில் கிளிஞ்சல்களில் உலையரிசி... வயல்வெளியில்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!