முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதியோடு போனது நமது ஜெகம் அழிக்கும் கோபம்

நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன். ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார். யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்... 'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன். திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள். வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை ப...

யாதும் ஊரே, கேளிர் எங்கே?

என் அம்மா சிறு வயதில் பள்ளி செல்லும் வழி எங்கும் சொந்தங்களால் நிறைந்திருந்தன அவரது மண்சாலைகள். பெரிய மட்டை, மொட்டை பாட்டி, சின்னு சின்னம்மா, தொப்புள் தாத்தா, குளத்தங்கரை பாட்டி, கதைப்பாட்டி, சமையல் சித்தப்பா, இன்னும் பலவிதமான கலவையான பெயர்கள் சொல்லி அவர் அவர்களை நினைவு கூர்வதே அவ்வளவு அழகு. சொந்தத்துக்குள் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து என நெருக்கித்தொடுத்த மல்லிகைச்சரம் போல ஊரே மணத்துக்கிடந்தது சொந்தங்களால். உறவு சலசலப்புகள் இருந்தாலும் சரம் தன் இயல்பை இழக்காத சரமாகவே இருந்தது. மல்லிகை அல்லாத வேறு மலர்கள் இந்த சரத்தில் சேர முடியாது என இயல்பாகவே / வேறு வழியின்றி அதனதன் சரம் தேடி மணம் முடிக்க, இப்படி பல மலர்ச்சரங்கள் நிறைந்திருந்தின அவரது நினைவில் நிற்கும் சிற்றூர்களில். ஒரு ஐம்பது வருட இடைவெளியில் எவ்வளவு சிற்றூர்களும் மலர்ச்சரங்களும் காணாமலே போய்விட்டன என நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது. முதலில் அறுபட்டது அவர்களது  நிலத்துடனான தொப்புள் கொடி உறவு.  அவர்களை தொடுத்திருந்த வாழ்வியல் நார் நைந்துபோனது அதன் பின். இன்று அநேக அடுத்த தலைமுறை மலர்களுக்கு அவர்கள் இருக்கும் ஊரெங்கும் சொந்...