முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடுக்காப்ளி ரயில்!

நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன். அப்பாவுக்கு எண்பது+  அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில். பழங்களை பகிர்ந்து உண்டோம். அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன். அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது... 'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம்.  அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம

Quit India? தமிழ் பதிவு.

  Can it be more sacred than this?! Food . இந்தந்த பருவத்துக்கு இதை இதை விதைக்கணும் என்பது விவசாயியின் கைகளிலில்லை. இந்தந்த பருவத்துக்கு இதை இதை சாப்பிடணும் என்பது நுகர்வோர் சிந்தனையிலும் இல்லை. இவர்களிருவருக்கும் எதை எப்போது எங்கு எப்படி செய்யவேண்டுமென மூளைச்சலவை செய்தது பெருவணிகம். அது போடும் லாபக்கணக்கில் சிக்கித்தள்ளாடுது நம் அனைவரின் வாழ்வும் நலமும். காந்தி கனவு கண்ட சுதந்திர (கி)ராம ராஜ்யம் பற்றி அறிந்திருப்பபோம்... 'என்று நள்ளிரவில் நிறைய நகைகள் அணிந்த இளம்பெண் பயமின்றி நம் சாலைகளில் துணையின்றி நடமாட முடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் பெறுவோம்' என்றார். இன்று அவர் இருந்திருந்தால் அவரது கனவு வேறு மாதிரி இருந்திருக்கும்... 'என்று நம் விவசாயிகள் தங்களது உணவுத்தேவைகளை தம் நிலங்களில் தாங்களே விளைவித்துக்கொண்டு, தமக்கு எஞ்சியதை என்ன விலைக்கு (அருகில் உள்ள) மற்றவர்க்கு விதைகளாகவோ விளைபொருட்களாகவோ கொடுக்கலாம் என முடிவெடுக்கும் உரிமையுடன் வாழ்கிறார்களோ அன்றே நம் நாடு தன்னிறைவான நாடாக மாறும்.' அப்போ சுதந்திரம்?  விளையாடாதீங்க பாஸ். அதுக்கெல்லாம் இன்று போராட காந்திக்குக்கூட நே