முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரங்கள் பேசுமா?

  மரமே மௌனமா? மரங்கள் பேசுமா? பல வருடங்கள் முன்பு ஒரு BBC Channel programme இல் விலங்குகள் நம்மோடு உரையாடும் மொழி பற்றி விவரித்தார்கள். ஒரு குதிரை லாயத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் குதிரையின் அருகில் புதியவர் ஒருவர் செல்கிறார். குதிரை உடனே விலகி நகர்கிறது. மீண்டும் அவர் அதே செயலை செய்ய, குதிரை மறுபடியும் விலகி நகர்கிறது. மூன்றாவது முறையும் அப்படியே. தன் செயலை அத்துடன் நிறுத்திய அந்த மனிதர், சற்றே விலகி நிற்க... குதிரை தானாகவே அவரை மெல்ல நெருங்கி அவரை முகர்ந்து பார்க்கிறது! இப்பொழுது இவர் நம்மைப்பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்; 'எங்களது உரையாடல் மொழி உங்கள் காதில் விழவில்லை அல்லவா? ஆனாலும் நாங்கள் உரையாடினோம்தானே?!' மனிதர்கள் தங்களுக்குள்ளே உரையாடுவதற்கு வேண்டுமானால் மொழி தேவையாக இருக்கலாம், ஏனைய உயிர்களோடு அவர்கள் உரையாட மொழி தேவையில்லை. எங்கள் வீட்டின் பின்புறம் மூன்று ஆண்டுகள் முன்பு நான் ஊன்றிய விதையிலிருந்து ஒரு பப்பாளி மரம் முளைத்தது. ஒரு ஆண்டுக்குள் நல்ல வளர்த்தி. காய்க்கவும் தொடங்கியது. ஒரு புள்ளியில் அந்த மரம் என் பச்சை பசுமை ஒளிப்படங்களின் இன்றியமையாத வண்ணமுமாகிப்போனத

மயிலாண்!

  எங்கள் வீட்டின் கொல்லைப்புற மதில் சுவர் எங்களுடையது இல்லை. இப்படித்தான் அதில் தினமும் வந்து தங்கும் மயிலாண் (ஆண் மயில்) சொல்லித்திரிகிறான், சில வருடங்களாய். வெகு சிநேகமாய் எங்களை அவன் உலகோடு பிணைத்துக்கொண்டவன். புதிதாய் யாராவது வந்தால் மட்டுமே தாவிப்பறந்து மறைவான். மற்றபடி அவன் நிம்மதியாக இளைப்பாறும் இடம் அது. லியோவுக்கும் போக்கோவுக்கும் (நான்கு கால் குழந்தைகள்) மதில் சுவர் மேல் அமர்ந்திருக்கும் மயிலாணோடு விளையாடுவது மிகப்பிடித்த பொழுதுபோக்கு. எங்களுக்கும்தான். லியோ இங்கு வரும் முன்னே அந்த மதில் மயிலாணோடது ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை லியோ மயிலாணின் இறகு பிடிக்க முயல, மயிலாண் லியோவின் முன் நெற்றியில் மெலிதாய் தன் மூக்கினால் கொத்தி.. அந்த இடம் சொட்டையாகி லியோ சொட்டையுடனே சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில். சில தினங்கள் முன்பு வீட்டருகில் எங்கெங்கோ மயில்களின் அகவல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. லியோவும் போக்கோவும்கூட இயல்புநிலையிலிருந்து விலகி அங்குமிங்கும் அலைவதை கண்டோம். ஆனால் வேலைகள் நிறைந்த நாளென்பதால் மறந்துபோனோம். மாலையில் எங்கள் நகரின் தகவல் பகிரும் குழுவில் (W