முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிரின் விலை 250 ரூபாய் மட்டுமே

இன்டர்நெட்டில் அரசு அலுவலர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்கள் படித்து மனது வைத்தால் இந்த பதிவு சேர வேண்டிய துறைகளுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு இப்பதிவு... அரை அடி விட்டம், வெவ்வேறு ஆழங்களில் நாடு முழுதும் குழந்தைகளுக்காக காத்திருக்கின்றன புதைகுழிகள்.  ஆழ்துளை கிணறுகள் இரு வகை. வேளாண் நிலங்களின் நீர்த்தேவைகளுக்காக தோண்டப்படுபவை ஒரு வகை. இதற்கு பல மாநிலங்களில் அனுமதி தேவை இல்லை. குடி நீர் தேவையை தணிக்க என்ற போர்வையில் நீர் வணிகத்திற்காக அனுமதியின்றி கள்ளத்தனமாக தோண்டப்படுபவை இன்னொரு வகை. தோண்டிய ஆழத்தில் நீர் வற்றிப்போனால் வேறு இடத்தில் உடனே இன்னொரு குழி. நீரின்றி அமையாது உலகு அல்லவா! வேளாண் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்ட அனுமதி கட்டாயமாக்கப்பட்டு, தோண்டிய ஆழ்துளை கிணறுகள் அடையாளமிடப்பட்டு மின் இணைப்பு எண்ணோடு அரசு நிலப்பதிவேடுகளில் பதியப்பட்டு, வில்லங்க சான்றிதழில் ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் உள்ளதா இல்லையா? இல்லையென்றால் மூடி போடப்பட்டுள்ளதா இல்லையா? (மூடியின் விலை 250 ரூபாயில் தொடங்குகிறது) என பதியப்பட்டு, பயன்பாட்டில் இல்லாத ஆழ

மூன்றாவது வகை கனவு / Dream of a third kind

கனவு காண யாருக்குத்தான் விருப்பமில்லை?! உறக்கத்தில் வருவது ஒரு வகை என்றால் உறங்கவிடாதது ஒரு வகை. இவை இரண்டும் தவிர இன்னொரு வகை கனவும் உண்டு. நாம் கண் "திறந்து" மட்டுமே காணக்கூடிய கனவு, அது மூன்றாம் வகை. திரைப்படங்கள் கூட கண்திறந்து காணக்கூடிய கனவுதானே என்கிறீர்களா?  இல்லை! கனவின் சிறப்பே பொருள் விளங்க  முடியாத / விளக்க முடியாத, உணரமட்டுமே முடியும் அதன் தனித்தன்மையே. It is a fleeting state which can only be experienced but never be revisited in its full vividness, lucidity and intensity. We can never feel them again in their entirity just by jogging our memory dial! A movie can be retold frame by frame but not these; not the ones you see here.  You can only cherish the feel but never express it in its true form with anyone else... Funny thing is, these dreams are just hanging around us, lying around us, flying around us during all our wakeful moments too but are we "looking"?

இந்த மழை...நிற்காது!

பார்வையற்ற இசைக்கலைஞன், இளைஞன். பகல் இரவு பேதமின்றி அளந்து நடந்து, வாழ்ந்து, வயலின் இசைப்பவன். அவனது ஆப்த நண்பனின் அன்பான கவனிப்பில் குறையற்ற வாழ்வு வாழ்பவன். கதை எழுதும் ஆவலில் நாயகி, யுவதி. மோதலில் தொடங்கி காதலாகி கசிந்துருகி...வீட்டின் எதிர்ப்பை முறியடித்து காதலனை கைப்பிடிக்கிறாளா இல்லையா என்பதை, அவளது பாசத்தாத்தனோடு முடிவுசெய்கிறாள். கதை அவ்வளவே.  அதை படமாக்கிய விதம், கவிதை... அற்புதம். இசை என்பது அமைதியும்தான் என்பதை 80களிலேயே இளையராஜா அழுத்தமாய் பதிந்த படம். பல காட்சிகளில் நிமிடங்கள் கணக்கில் இயல்பான சூழல் சத்தங்களே இசையாக மாறும் விந்தையை இங்கேயே தொடங்கிவிட்டார். அந்தி மழையில் நனைந்துகொண்டே இப்படப்பாடல்களை ரசிப்பது, இன்றும் தொடர்கிறது. பின்னொரு நாளில் கமல் சொன்னதாய் படித்தது இது: 'படம் ஓடலைங்கிற வருத்தம் இருந்தது. எங்கெங்கே தப்பு பண்ணிருக்கேன்னு நல்லாவே தெரியுது. இன்னுமொருமுறை எடுத்தால் வேற மாதிரி எடுக்கலாம்'. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை, இல்லவே இல்லை. Raja Paarvai is a certified cult classic! &quo