இதுவல்லவா வாழ்வு! கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள்; மெல்ல தாலாட்டும் நதியில் சில படகு வீடுகள், பத்து இருபது மனிதர்கள், நினைத்தபோது நதியில் பயணித்து இரவில் / பகலில் மீன் பிடித்து என வாழ்வு. நதிக்கரையில் இந்த மனிதர்களை தேடி வந்து மீன் வாங்கும் மக்கள் கூட்டம், படகு வீடுகளின் குழந்தைகள் படிக்க அருகில் சிற்றூரில் பள்ளிக்கூடம்... நதிப்படகே வாழ்விடம்! இருபது வருடங்களாக இப்படி ஒரு மேலான வாழ்வை நம் நாட்டில் சிலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்! சமீபத்தில் அரசு இவர்களுக்கு ரேஷன் அட்டைகளும் தந்து கௌரவப்படுத்தியுள்ளது!! ஆந்திரா, ஒரிசா, சட்டீஷ்கர் மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் நிலப்பரப்பில் மூன்று மாநிலங்களையும் நனைத்துச்செல்லும் சபரி நதியில் இவர்கள் வாழ்கின்றார்கள். (சபரி, கோதாவரியின் கிளை நதி) உழைப்பால் இவர்கள் மீனவர்கள். 'நமக்கெதற்கு நிலத்தில் வீடு?' என இவர்களில் மூத்தவர், குடம் வெங்கடேஸ்வர்லு, ஒரு நாள் சிந்தித்ததன் விளைவு இது. ஆண்களும் பெண்களும் தேவைக்கு மீன் பிடித்து விற்று, இவர்களது குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கல்வி கற்று... இப்போது அடுத்த தலைமுறையில் ஒரு திருமணமும் நிகழ்ந்திரு
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!