முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்மினிப்பூச்சியொன்றின் இரவுக்கவிதை

ஒற்றைப்பார்வையில் உன்னுள்  நான் தொலைந்த நொடியில் நீயும் என்னுள்ளே தொலைந்தாய். நானும் நீயும் நாமாகி பல்கிப்பெருகி பூமி முழுதும் நம் குழந்தைகளை இட்டு நிரப்பி... ஒற்றை வான் கூரையின் கீழ் ஒற்றைக்கதிரவன் ஒற்றை நிலவின் வெளிச்ச வழிகாட்டுதலில் சுழலும் ஒற்றை பூமியில்தான் நாமிருக்கிறோம், நமது குழந்தைகளும்தான். ஆனாலும்... உனக்கென ஒரு பூமி எனக்கென ஒரு பூமி உனக்கென ஒரு வானம் எனக்கென ஒரு வானம் உனக்கென ஒரு கதிரவன் எனக்கென ஒரு கதிரவன் உனக்கென ஒரு நிலவு எனக்கென ஒரு நிலவு இன்று நம் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு ஆயிரமாயிரம் பூமி, வானம், கதிரவன், நிலவு... ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி பின்பு பலவாகி... ஒற்றைக்கதிரவனும் ஒற்றை நிலவும் வானமும் பூமியும்கூட ஒற்றைக்கருந்துளை கக்கிய எச்சம்தானாம். அந்த ஒற்றைக்கருந்துளையை கக்கியதெதுவோ அதுவே இறையோ? அறிவியலின் எல்லைக்கு வெகு தொலைவில் எங்கோ இருந்தபடி இருந்து பார்த்துக்கொண்டிருக்கிற அந்த இறையை நாம் கற்பிதம் கூட செய்யமுடியாத அண்ட பேரண்டக்கோவிலில் அமர்த்தி வைத்தது யாரோ?! இதற்கு விடை எனது புலனுக்கு எட்டாதிருக்கலாம். ஆனால் இதனை காரணம் காட்டி நான் எனது வெளிச்சத்தை நிறுத்தப்போவதி